சேலையை பிடித்து இழுத்து.. அநாகரீகமாக சட்டசபையிலிருந்து வெளியேற்றினர்.. விஜயதாரணி பரபர குற்றச்சாட்டு!
சபை காவலர்கள் தன்னை சேலையை பிடித்து இழுத்து அநாகரீகமான முறையில் காயப்படுத்தி சட்டசபையில் இருந்து வெளியேற்றினார்கள் என விஜயதாரணி குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video

சென்னை: சபை காவலர்கள் தன்னை சேலையை பிடித்து இழுத்து அநாகரீகமான முறையில் காயப்படுத்தி சட்டசபையில் இருந்து வெளியேற்றினார்கள் என விஜயதாரணி குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டசபையில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி, கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக பேச சபாநாயகரிடம் அனுமதி கேட்டார்.
அதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்ததால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து விஜயதாரணி சபாநாயகருடன் மோதலில் ஈடுபட்டதால் அவரை வெளியேற்ற சபை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.

அழைத்து செல்ல முயற்சி
இதைத்தொடர்ந்து பெண் காவலர்கள் உள்ளே வந்து விஜயதாரணியை கையைப் பிடித்து வெளியே அழைத்துச் செல்ல முயன்றனர்.

என்னை தொடாதீர்கள்
அவர்களைப் பார்த்து விஜயதாரணி, ‘‘என்னை தொடாதீர்கள்'' என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் ஆவேசமாக கூறினார். தொடர்ந்து அவர் வெளியேற மறுத்ததால் வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள்.

விஜயதாரணி பேட்டி
இதைத்தொடர்ந்து சட்டசபை வளாகத்தில் விஜயதாரணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, சட்டசபையில் கன்னியாகுமரி மாவட்ட பிரச்சனை குறித்து பேச அனுமதி கேட்டேன்.

அனுமதி மறுப்பு
நேற்றும் இது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தேன். ஆனால் எனக்கு பேச சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார். தொடர்ந்து நான் வற்புறுத்தியதால் சபை காவலர்களை கொண்டு வெளியேற்றினார்.

சேலையை பிடித்து இழுத்து
சபை காவலர்கள் என்னை அநாகரீகமான முறையில் காயப்படுத்தி வெளியேற்றினார்கள். சேலையைப் பிடித்தும், கையைப் பிடித்து இழுத்தும் வயிற்றை, நெஞ்சை அமுக்கியும் வெளியேற்றினார்கள்.

சபாநாயகர் அநாரீகம்
சட்டசபையில் சபாநாயகரும் அநாகரீகமான முறையில் பேசினார். இவ்வாறு விஜயதாரணி செய்தியாளர்களிடம் பேசினார்.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
"ஜெயிக்க வேண்டிய தேர்தல் இது.." கடும் கோபத்தில் ராகுல்! நள்ளிரவை தாண்டி.. என்ன நடந்தது -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு? -
செல்போனில் வந்த மர்ம லிங்கால் 12 லட்சத்தை இழந்த எம்எல்ஏ.. பவன் கல்யாண் ஆதரவாளர் ஏமாந்தது எப்படி -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா?












Click it and Unblock the Notifications