பரபர அரசியல் சூழலில்.. நாளை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்
பரபரப்பான அரசியல் சூழலில் நாளை காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை: சத்தியமூர்த்திபவனில் நாளை மாலை 5 மணிக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறயுள்ளது.
அதிமுக அணிகள் பிரிந்து சண்டை போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஆட்சி நிலைக்குமா எம்எல்ஏக்கள் எந்த அணிப் பக்கம் செல்வார்கள் என பல்வேறு குழப்பமான சூழ் நிலையில் நாளை சட்டசபைக் கூட்டத் தொடர் தொடங்க உள்ளது.

இதனைத் தொடர்ந்து இன்று மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் முக்கியமான பொருள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதே போன்று திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளை மாலை நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் அனைத்து எம்எல்ஏக்களும் பங்கேற்க வேண்டும் என்று சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராமசாமி அழைப்பு விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications