''யாரை நம்பி நான் பொறந்தேன்''.. இந்த பாட்டை காங்கிரஸ் காலர் டியூனாக வைக்கலாம்!
சென்னை: தமிழகத்தில் முக்கிய கட்சிகள் அனைத்தும் கூட்டணி அமைத்துவிட்டதால் தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டு கதிகலங்கிப் போய் உள்ளது.
தேமுதிகவை எப்படியாவது தங்கள் பக்கம் இழுத்துவிட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைமை மேலிடத்துக்கு ஆலோசனை தெரிவித்தது.

அதன் அடிப்படையில் தேமுதிக உடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது. ஆனால் டெல்லியிலும் சென்னையிலும் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தேமுதிக பாஜகவுக்குப் போய்விட்டது.
திமுகவும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடித்து ஓரிரு நாளில் வேட்பாளர் பட்டியலை வெளியிட தயாராகி வருகிறது. கூட்டணியில் காங்கிரஸை சேர்க்க ஸ்டாலின் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்.
இப்படி ஒவ்வொரு கட்சிகளாக காங்கிரஸை கழற்றிவிட்டு விட்டதால் காங்கிரசார் மத்தியில் தவிப்பும் பீதியும் ஏற்பட்டுள்ளது.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தான் அவ்வப்போது எல்லா கட்சிகளையும் திட்டியபடியே காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் அளவுக்கு பலமாகவே இருப்பதாகக் கூவுவார். அவரது ஆசை இந்தத் தேர்தலில் நிறைவேறிவிடும் போலிருக்கிறது.












Click it and Unblock the Notifications