பிரச்சாரகளத்தில் திராவிட கட்சிகள் போல் “பின்னி பெடலெடுக்கும்” காங்கிரஸ் கட்சி
சென்னை: நெருங்கி வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக, அதிமுக போன்ற திராவிட கட்சிகள் சுறுசுறுப்பான பிரச்சார களத்தில் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சியானது, உங்களுக்கு நாங்கள் ஒன்றும் குறைந்தவர்கள் இல்லை என்று உற்சாகமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது.
மக்களுக்கு நல்லது செய்கிறார்களோ இல்லையோ,இந்த கட்சிகள் ஒருவருக்கு ஒருவரை "கழுவி கழுவி ஊத்திக்கொள்ள" தயங்குவதே இல்லை.

தனித்து போரிடும் காங்கிரஸ்:
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகின்றது. திமுக, அதிமுக போன்ற திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே எப்பொழுதும் தேர்தலை எதிர்கொண்ட காங்கிரஸ் தொண்டர்களுக்கு இந்த தேர்தல் நீண்ட இடை வெளிக்கு பிறகு ஒரு புதிய அனுபவத்தை கொடுத்துள்ளது.

வரிசையாக குற்றச்சாட்டு:
தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் அரசு மீது எல்லா வகையான கட்சிகளும் வரிசையாக குற்றச்சாட்டுகளை வீசி வருகின்றன.

சளைத்தவர்கள் நாங்கள் அல்ல:
தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் காங்கிரசை கடுமையாக விமர்சிக்கின்றன. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் வேட்பாளர்களும் தங்களது பிரசாரத்தில் திமுக, அதிமுகவை கடுமையாக போட்டு தாக்குகின்றனர்.

மாத்தி,மாத்தி குற்றச்சாட்டு:
மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு மறைக்கின்றனர் என்று தமிழக அரசு மீது காங்கிரசார் எதிர் பிரசாரம் செய்கின்றனர்.

உற்சாகம் குறையா காங்கிரஸ் தொண்டர்கள்:
தமிழக் கட்சிகளுக்கு இணையாக காங்கிரஸ் தொண்டர்களும் பிரசார களத்தில் உற்சாகமாக ஓடுகிறார்கள். வேட்பாளர்களுக்கு முன்பு தொண்டர்கள் காங்கிரஸ் கட்சியின் கொடியை பிடித்து மோட்டார்சைக்கிளில் அணி வகுத்து ஊர்வலமாக செல்கின்றனர்.

சூடு பிடிக்கிது பிரச்சாரம்:
பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மேளதாளம் மற்றும் இசை கச்சேரியுடன் பிரசாரம் செய்கின்றனர். காங்கிரஸ் தொண்டர்களா இவர்கள் என்று மக்களே வியப்படையும் வகையில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

சாதனைகளின் பட்டியல்:
ஏழை , எளிய மக்களுக்கு மத்திய அரசு செய்த சாதனை திட்டங்களை எடுத்துக்கூறி புதிய உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் காங்கிரஸ் தொண்டர்கள் இப்போது பிரசாரம் செய்து வருகின்றனர்.

நிரூபிப்போம் எங்கள் பலத்தை:
தனித்து போட்டியிடுவது மூலம் காங்கிரசின் உண்மையான பலம் என்ன என்பதை இந்த தேர்தல் வெளிக்காட்டும் என்பதால் காங்கிரஸின் மூத்த தலைவர்கள், முன்னாள், இன்னாள் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் என அனைவரும் தங்கள் முழு பலத்தையும் காட்டுகிறார்கள்.

வீடு வீடாக ஓட்டு கேட்கும் காங்கிரஸ்:
வெற்றி , தோல்வியை பற்றி கவலைப்படாமல் குறிப்பிட்ட சதவீதம் ஓட்டுகளை அனைத்து தொகுதிகளிலும் பெற வேண்டும் என்ற இலக்குடன் வீடு வீடாக ஓட்டு சேகரிக்கின்றனர்.

நெருப்பு படுக்கை:
தமிழகத்தில் காங்கிரஸ் ஒரு நிலையான இடத்தை தக்க வைத்துக் கொள்ள இந்த தேர்தல் பலப்பரீட்சையாக கருதப்படுகிறது.

களப்பணியில் தீவிரம்:
தேர்தலில் வெற்றியே இலக்காக இருந்தாலும் திராவிட கட்சிகளுக்கு இணையாக காங்கிரசும் களத்தில் சமமாக களப்பணி செய்து வருகின்றது.

தோல்வி நிலையென நினைத்தால்:
வீதிகளில் தேர்தல் பணியை கூட்டாக சேர்ந்து செய்த காங்கிரஸ் தொண்டர்கள் இப்போது தனியாக செய்து வருகின்றனர். இது அவர்களுக்கு புதிதாக இருந்தாலும் மனதில் நல்ல நம்பிக்கையை விதைத்துள்ளது.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications