”காங்கிரஸை மக்கள் இவ்வளவு எதிர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை” – ஜி.கே.வாசன் பேட்டி
சென்னை: மக்களின் எதிர்ப்பலையை காங்கிரஸ் கட்சி இந்த அளவுக்கு எதிர்பார்க்கவில்லை என்று காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஜி.கே .வாசன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் தோல்வி குறித்து இன்று சென்னை சத்திய மூர்த்தி பவனில் செய்தியாளர்களை முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே வாசன் சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்போது அவர், "காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கான உண்மையான காரணங்கள் கண்டறிய வேண்டும். காரணங்கள் கண்டறிந்து நல்ல முடிவுகள் எடுக்கப்படும். காங்கிரஸ் கட்சியினர் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.
ஆக்கப்பூர்வ எதிர்கட்சியாக காங்கிரஸ் செயல்படும். கட்சியை பலப்படுத்தும் முடிவுகளை காங்கிரஸ் மேலிடம் எடுக்கும். மக்களின் எதிர்ப்பலையை இந்த அளவுக்கு காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கவில்லை" என்று கூறியுள்ளார்.
மேலும்,பாஜக அவசர சட்டம் மூலம் முதன்மை செயலாளரை நியமித்தது குறித்து கருத்து தெரிவித்த அவர், "அவசர சட்டதின் மூலம் செயலாளரை நியமிப்பது நல்ல மரபல்ல. லோக்பால் போன்ற மசோதவை கூட அவசர சட்டத்தின் மூலம் உருவாக்கபடுவதை பாஜக எதிர்த்தது.தற்போது தனி ஒருவர நியமனத்துக்கு அவசர சட்டம் இயற்றியுள்ளது.
காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை மறு ஆய்வு செய்வது தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தும் .பிரச்சினைய தூண்டும் பேச்சுக்களை ஆட்சியாளர்கள் தவிர்க்க வேண்டும்.
தேசிய அளவிலான பிரச்சினைகளே தோல்விக்கு காரணமாயின. கட்சியின் உட்கட்சி பிரச்சினைகளை வெளியில் பேசவேண்டாம்" என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications