மீண்டும் மத்தியில் காங்கிரஸ் அரசு அமைவது நிச்சயம்: உம்மன்சாண்டி நம்பிக்கை
சென்னை: மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி நம்பிக்கைத் தெரிவித்துள்ளாஅர்.
மும்பையில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்த கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி, மோடியால் மத்தியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதில் பிரச்சினை இருக்காது எனத் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, ‘பாரதீய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை முன்நிறுத்துவதால் காங்கிரஸ் கட்சிக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது. கடந்த 9 ஆண்டுகள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் ஏழை, எளிய மக்களுக்காகவும், சிறுபான்மை மக்களுக்காகவும் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி செய்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்போம். 3-வது முறையாக காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ஏற்படும். காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகள் முழு நம்பிக்கையுடன் உள்ளன. காங்கிரஸ் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேர உள்ளன.
பெரும்பான்மையான ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும். தமிழக மீனவர்களின் நலனுக்காக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினால் அதில் நல்ல தீர்வு கிடைக்கும். இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து தரும். முல்லைபெரியாறு அணை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதுபற்றி கருத்து கூற விரும்பவில்லை' என இவ்வாறு அவர் கூறினார்.
-
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
ஶ்ரீபெரும்புதூரை குறிவைத்த விசிக.. தொகுதி மாறும் செல்வப்பெருந்தகை.. எங்கு தெரியுமா -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்!












Click it and Unblock the Notifications