உள்ளாட்சித் தேர்தலில் காங். தனித்து போட்டி என்பது ஆதாரமற்றது: ஸ்டாலின்
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்ற செய்திகள் ஆதாரமற்றவை என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீட்டில் காங்கிரஸ் கட்சி அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது. இந்த நிலையில் சென்னை வந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு தரும் எனக் கூறினார்.

இதனால் திமுக- காங்கிரஸ் கூட்டணி உடையக் கூடும் என கூறப்பட்டது. இதற்கு வலுசேர்க்கும் வகையில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும், எந்த கூட்டணியும் ஆயுட்கால கூட்டணி இல்லை எனக் கூறியிருந்தார்.
மேலும் சென்னையில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் திமுகவுடனான கூட்டணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதனால் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடக் கூடும் எனவும் கூறப்பட்டு வருகிறது.
இதனிடையே சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடப் போவதாக கூறப்படுவது ஆதாரமற்றது என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications