For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்னும் 100 நாட்களில் தமிழகத்துக்கு விடிவு வந்துவிடும்.... குஷ்பு ஆரூடம்

By Mathi
Google Oneindia Tamil News

ராணிப்பேட்டை: இன்னும் 100 நாட்களிலேயே தமிழகத்துக்கு விடிவு வந்துவிடும் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரான நடிகை குஷ்பு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டையில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் குஷ்பு பேசியதாவது:

Congress will win assembly elections, says Khushboo

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 100 நாட்கள்தான் உள்ளது. தமிழ்நாட்டில் மக்களை காக்க காங்கிரஸ் உள்ளது.

காங்கிரசுக்கு வெற்றி என்பது உறுதி... தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டதில் இருந்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஓய்வில்லாமல் உழைத்து வருகிறார்.

ஹைதராபாத்தில் மாணவன் தற்கொலை பற்றி ராகுல்காந்திதான் நேரில் சென்று விசாரித்தார். பாஜகவின் கோட்டை என கூறப்பட்ட இடங்களில் எல்லாம் ஓட்டை விழுந்து வருகிறது.

காங்கிரஸ் ஆட்சியில்தான் அனைத்து மக்களும் பாதுகாப்பாக இருந்தனர். 100 நாட்களில் தமிழ்நாட்டுக்கு விடிவு வந்து விடும். 3 ஆண்டுகளில் இந்தியாவுக்கும் விடிவு வந்து விடும்.

இவ்வாறு குஷ்பு பேசினார்.

English summary
AICC spokesperson Khushboo said that Congress will win in upcoming Tamilnadu assembly elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X