கெஜ்ரிவால் படத்துக்கு செருப்பு மாலை - சென்னையில் காங்கிரசார் போராட்டம்!
சென்னை: ஊழல்வாதிகளின் பட்டியலில் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் பெயரை சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் காங்கிரஸார் அரவிந்த் கேஜ்ரிவாலின் படத்துக்கு செருப்பு மாலை போட்டு போராட்டம் நடத்தினர்.
ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் ஊழல் அரசியல் தலைவர்கள் பட்டியலை வெளியிட்டார். இதில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரது பெயர் இடம்பெற்றிருந்தது.

சோனியா மற்றும் ராகுல்காந்தியின் பெயரும் ஊழல்வாதிகளின் பட்டியலில் இடம்பெற்று உள்ளதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து கேஜ்ரிவாலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி சென்னை மயிலாப்பூரில் 100க்கும் மேற்பட்ட காங்கிரஸார் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் கேஜ்ரிவால் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து முழக்கங்களை எழுப்பினர். அப்போது அவரது உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications