ராசா தொகுதியில மொத்தம் 16 பேர் தான் வேட்புமனுத் தாக்கல் செஞ்சிருக்காங்களாம்....
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் மொத்தம் 1359 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதில் ராமநாதபுரம் தொகுதியில்தான் அதிகபட்சமாக 59 பேர் மனு செய்துள்ளனர்.
அதேபோல 4 தொகுதிகளில் 50க்கும் மேற்பட்டோர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
குறைந்தபட்சமாக நீலகிரி மற்றும் நாகையில் தலா 16 பேர் மட்டுமே வேட்பு மனுத் தாக்கல் செய்துளளனர்.
40 தொகுதிகளிலும், தொகுதி வாரியாக வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் விவரம் வருமாறு:

ராமநாதபுரம் தான் டாப்...
ராமநாதபுரத்தில் 59 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதற்கு அடுத்த இடங்களில் வட சென்னையில் 53 பேரும், அரக்கோணத்தில் 52 பேரும், திருவண்ணாமலையில் 51 பேரும் என 4 நான்கு தொகுதிகளில் 50க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மதுரையில் 46 பேர்....
அதேபோல், தென் சென்னையில் 46 பேரும், மதுரையில் 46 பேரும், தேனியில் 44 பேரும், மத்திய சென்னையில் 43 பேரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
வேலூரில் 38...
வேலூரில் 38 பேரும், ஸ்ரீபெரும்புதூரில் 38 பேரும், திருச்சி, நெல்லை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய தொகுதிகளில் தலா 37 பேரும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
நாமக்கல்லில் 35 பேர்....
மேலும், நாமக்கல் தொகுதியில் 35 பேரும், கோவை, சேலம், கன்னியாகுமரி தொகுதிகளில் தலா 34 பேரும், கள்ளக்குறிச்சியில் 33 பேரும், திருப்பூர், கரூர் தொகுதிகளில் தலா 32 பேரும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
சிதம்பரத்தில் 31 பேர்....
சிதம்பரத்தில் 31 வேட்பு மனுக்களும், தஞ்சை, பெரம்பலூர், தூத்துக்குடியில் 30 வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப் பட்டுள்ளன. அதேபோல், பொள்ளாச்சி, தர்மபுரி தொகுதிகளில் 29 வேட்பு மனுக்களும், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை தொகுதியில் 28 மனுக்களும், ஈரோட்டில் 27 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
ஆரணியில்....
கடலூர், விழுப்புர தொகுதியில் 26 மனுக்களும், திண்டுக்கல், திருவள்ளூர் தொகுதிகளில் 25 மனுக்களும், காஞ்சீபுரம், ஆரணி தொகுதிகளில் 24 வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
ராசா தொகுதியில் குறைவான வேட்பாளர்கள்...
ஆரணியில் 24 பேரும், தென்காசியில் 22 பேரும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். மிகக் குறைந்த அளவாக நாகை மற்றும் நீலகிரி தொகுதியில் மொத்தம் 16 பேர் மட்டுமே வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.
புதுவையில்....
அதேபோல், புதுச்சேரியில் 41 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications