காட்டுப் பகுதியில் பழுதாகி நின்ற குன்னூர் மலை ரயில்: பயணிகள் அவதி
Subscribe to Oneindia Tamil
நீலகிரி: மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் சென்ற மலை ரயில் பழுதாகி காட்டுப்பாதையில் நின்றதால் பயணிகள் அவதிப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை மலை ரயில் 173 பயணிகளுடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு கிளம்பியது.

உந்து சக்தி குறைந்து ரயில் குன்னூர் செல்லும் வழியில் நின்று நின்று சென்றது. காட்டேரி என்ற இடத்தில் என்ஜின் ராடு தீடீர் என உடைந்து நடுகாட்டுப் பாதையில் ரயில் நின்றது.

இதையடுத்து டிரைவர் உடனடியாக குன்னூர் ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து மாற்று எஞ்சின் வந்து ரயில் குன்னூர் ரயில் நிலையத்தை அடைந்தது.
ரயில் காட்டுப் பாதையில் பழுதடைந்ததால் பயணிகள் அவதிப்பட்டனர்.













Click it and Unblock the Notifications