தவறுகளை திருத்திக் கொண்டு வராவிட்டால் திருத்தப்படுவீர்கள்.. டி.டி.வி தினகரன் பேட்டி!
தங்களிடமுள்ள தவறுகளைத் திருத்திக்கொண்டு வரவேண்டும் இல்லையென்றால் அவர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று டிடிவி தினகரன், மதுரையில் கூறியுள்ளார்.
மதுரை: பிரிந்து சென்று தனித்தனி அணிகளாக உள்ளவர்கள் தங்களின் தவறுகளைத் திருத்திக்கொண்டு மீண்டும் வரவேண்டும் என்றும், அப்படி செய்யவில்லை என்றால் அவர்கள் திருத்தப்படுவீர்கள் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
டி.டி.வி தினகரன் குடும்பத்துடன் இன்று மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி தினகரன்," ஒன்றரை கோடி தொண்டர்களோடு கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளேன். மேலூர் கூட்டம் தொடக்கம்தான். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரே எங்களுக்கு ஒய்வு, உறக்கம். தமிழக மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள். தவறுகளை திருத்தி கொண்டு திருந்தி வாருங்கள், இல்லையெனில் திருத்த படுவீர்கள்" என கூறினார்.

முன்னதாக டி.டி.வி தினகரன் சாமி தரிசனம் செய்து கொண்டிருக்கும் போது ஒ.பி.எஸ் அணியை சேர்ந்த மதுரை சோழவந்தான் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம் மீனாட்சியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றதால் இருவரும் சந்திக்க வாய்ப்பு என கூறப்பட்டது. ஆனால் அப்படி நடக்கவில்லையாம்.












Click it and Unblock the Notifications