ஸ்ரீரங்கத்தில் 9,000 போலி வாக்காளர்கள்... நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் ஆணையம் கோர்ட்டில் உத்தரவாதம்!
சென்னை: ஸ்ரீரங்கம் தொகுதியில் பலமுறை இடம் பெற்றுள்ள 9 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்களை நீக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில், இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்துள்ளது.
ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதிக்கு வரும் 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் திமுக சார்பில் என்.ஆனந்த் போட்டியிடுகிறார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அம்மனுவில் அவர், கூறியிருப்பதாவது:-
ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிற 13-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் நான் போட்டியிடுகிறேன். இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் 15-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. அதில், ஒரே வாக்காளரின் பெயர் பல இடங்களில் இடம் பெற்றிருந்தது. இதுகுறித்து தி.மு.க. சார்பில் கடந்த நவம்பர் 5-ந்தேதி தலைமை தேர்தல் அதிகாரிக்கு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலை கடந்த ஜனவரி 5-ந் தேதி மற்றும் 27-ந்தேதிகளில் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
அந்த பட்டியலிலும், ஒரே வாக்காளரின் பெயர், பல்வேறு முகவரியில், பலமுறை இடம் பெற்றுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க வேண்டும் என்று வாக்காளர்கள் கொடுத்த முகவரி தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. இறந்தவர்கள் பெயரும், வேறு தொகுதிக்கு குடிபெயர்ந்தவர்களின் பெயரும், வாக்கு அளிக்க தகுதியில்லாதவர்களின் பெயரும் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு, அந்த வாக்காளர் பட்டியலில் 9 ஆயிரம் போலி வாக்காளர்களின் பெயர்கள் உள்ளது. எனவே, பல முறை இடம் பெற்றுள்ள மற்றும் இறந்தவர்கள், வீடு மாறியவர்கள் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டிருந்தது.
இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல் நிரஞ்சன், ‘அரசியலமைப்பு சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, வேட்புமனுக்கள் திரும்ப பெறும் கடைசி நாள் முடிந்த பிறகு, வாக்காளர் பட்டியலில் திருத்தம் எதுவும் செய்ய முடியாது என்றும் அதேநேரம், வீட்டில் இல்லாதவர்கள், வேறு முகவரிக்கு மாறியவர்கள், இறந்தவர்கள் ஆகியோரது பெயர் விவரங்களை கொண்ட (ஏ.எஸ்.டி.) பட்டியலை வெளியிடும்போது, மனுதாரரின் கோரிக்கைகளையும் சேர்த்து பரிசீலிக்கப்படும்' என்று வாதிட்டார்.
ஆனால், மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், ‘ஏ.எஸ்.டி. பட்டியல் என்பது வேறு. வாக்காளர் பட்டியலில் பலமுறை இடம் பெற்றுள்ள பெயர்களை நீக்கும் பணி என்பது வேறு. எனவே, பலமுறை பெயர் இடம் பெற்றுள்ள வாக்காளர் பட்டியலைத்தான் சரி செய்யவேண்டும்' என்று வாதிட்டார்.
அதற்கு தேர்தல் ஆணையம் வக்கீல், ‘சரியான வாக்காளர்களின் பெயர்களை கொண்ட பட்டியலை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்' என்று உத்தரவாதம் அளித்தார். இந்த உத்தரவாதத்தை நாங்கள் பதிவு செய்துக் கொள்கிறோம்.
2 நாட்களுக்குள்...
இந்த பணிகளை எல்லாம் தேர்தல் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு தேர்தல் ஆணையம் மேற்கொள்ளவேண்டும். பின்னர், அந்த விவர பட்டியலை வாக்குப்பதிவு மையங்கள், வாக்குப்பதிவு மையத்தின் முகவர்களுக்கு ஆகியோருக்கு வழங்கவேண்டும். மனுவை பைசல் செய்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
-
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
மதுக்கடைகளுக்கு தேர்தல் ஆணையம் போடும் கடிவாளம்.. ஓவர் டைம் என புலம்பும் டாஸ்மாக் பணியாளர்கள்! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications