Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்ரீரங்கத்தில் 9,000 போலி வாக்காளர்கள்... நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் ஆணையம் கோர்ட்டில் உத்தரவாதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்ரீரங்கம் தொகுதியில் பலமுறை இடம் பெற்றுள்ள 9 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்களை நீக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில், இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்துள்ளது.

ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதிக்கு வரும் 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் திமுக சார்பில் என்.ஆனந்த் போட்டியிடுகிறார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அம்மனுவில் அவர், கூறியிருப்பதாவது:-

ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிற 13-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் நான் போட்டியிடுகிறேன். இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் 15-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. அதில், ஒரே வாக்காளரின் பெயர் பல இடங்களில் இடம் பெற்றிருந்தது. இதுகுறித்து தி.மு.க. சார்பில் கடந்த நவம்பர் 5-ந்தேதி தலைமை தேர்தல் அதிகாரிக்கு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

Corrective list of voters will be issued, EC tells court

இந்த நிலையில், ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலை கடந்த ஜனவரி 5-ந் தேதி மற்றும் 27-ந்தேதிகளில் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

அந்த பட்டியலிலும், ஒரே வாக்காளரின் பெயர், பல்வேறு முகவரியில், பலமுறை இடம் பெற்றுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க வேண்டும் என்று வாக்காளர்கள் கொடுத்த முகவரி தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. இறந்தவர்கள் பெயரும், வேறு தொகுதிக்கு குடிபெயர்ந்தவர்களின் பெயரும், வாக்கு அளிக்க தகுதியில்லாதவர்களின் பெயரும் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

இவ்வாறு, அந்த வாக்காளர் பட்டியலில் 9 ஆயிரம் போலி வாக்காளர்களின் பெயர்கள் உள்ளது. எனவே, பல முறை இடம் பெற்றுள்ள மற்றும் இறந்தவர்கள், வீடு மாறியவர்கள் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டிருந்தது.

இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல் நிரஞ்சன், ‘அரசியலமைப்பு சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, வேட்புமனுக்கள் திரும்ப பெறும் கடைசி நாள் முடிந்த பிறகு, வாக்காளர் பட்டியலில் திருத்தம் எதுவும் செய்ய முடியாது என்றும் அதேநேரம், வீட்டில் இல்லாதவர்கள், வேறு முகவரிக்கு மாறியவர்கள், இறந்தவர்கள் ஆகியோரது பெயர் விவரங்களை கொண்ட (ஏ.எஸ்.டி.) பட்டியலை வெளியிடும்போது, மனுதாரரின் கோரிக்கைகளையும் சேர்த்து பரிசீலிக்கப்படும்' என்று வாதிட்டார்.

ஆனால், மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், ‘ஏ.எஸ்.டி. பட்டியல் என்பது வேறு. வாக்காளர் பட்டியலில் பலமுறை இடம் பெற்றுள்ள பெயர்களை நீக்கும் பணி என்பது வேறு. எனவே, பலமுறை பெயர் இடம் பெற்றுள்ள வாக்காளர் பட்டியலைத்தான் சரி செய்யவேண்டும்' என்று வாதிட்டார்.

அதற்கு தேர்தல் ஆணையம் வக்கீல், ‘சரியான வாக்காளர்களின் பெயர்களை கொண்ட பட்டியலை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்' என்று உத்தரவாதம் அளித்தார். இந்த உத்தரவாதத்தை நாங்கள் பதிவு செய்துக் கொள்கிறோம்.

2 நாட்களுக்குள்...

இந்த பணிகளை எல்லாம் தேர்தல் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு தேர்தல் ஆணையம் மேற்கொள்ளவேண்டும். பின்னர், அந்த விவர பட்டியலை வாக்குப்பதிவு மையங்கள், வாக்குப்பதிவு மையத்தின் முகவர்களுக்கு ஆகியோருக்கு வழங்கவேண்டும். மனுவை பைசல் செய்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+