ஆர்.கே நகரில் மட்டுமல்ல.. இன்னும் நான்கு தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடக்குது மக்களே!

ஆர். கே நகரில் மட்டுமில்லாமல் இன்னும் 4 தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர். கே நகரில் மட்டுமில்லாமல் இன்னும் 4 தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. உத்தரபிரதத்தில் இருக்கும் சிக்கந்தர் தொகுதி, மேற்கு வங்கத்தில் இருக்கும் சபாங் தொகுதி, அருணாசலப்பிரதேசத்தில் இருக்கும் பக்கே கசாங் மற்றும் லைக்காபாலி ஆகிய தொகுதிகளிலும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

கடந்த 21ம் தேதி ஆர்.கே நகரில் இடைத்தேர்தல் நடைபெற்றது. தற்போது இதற்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. அதேபோல் இடைத்தேர்தல் நடந்த மேலும் நான்கு தொகுதிகளுக்கும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

Counting of votes for 5 constituency Bye-election held today

இந்த நான்கு தொகுதிகளுக்கும் ஆர்.கே நகரில் தேர்தல் நடந்த அதே நாளில் தேர்தல் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அருணாசலப்பிரதேசத்தில் இருக்கும் லைக்காபாலி தொகுதி எம்எல்ஏவாக இருந்த முன்னாள் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் 'ஜோம்டே கேனா' மரணம் அடைந்ததால் அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
'
அதேபோல் உத்தர பிரதேசத்தின் சிக்கந்தர் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த 'மதுரா பிரசாத் பால்' மரணம் அடைந்ததால் அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆர்.கே நகர் போலவே இந்த தொகுதிகளிலும் அதிக அளவில் வாக்குகள் பதிவாகி இருக்கிறது.

இத்தனை தொகுதிகளில் வாக்குகள் எண்ணப்பட்டாலும் ஆர்.கே நகர் தொகுதி மட்டுமே அனைவரின் கவனத்தில் இருக்கிறது. இந்த தொகுதியின் முடிவுகள் தமிழக அரசியலை பெரிய அளவில் பாதிக்கும் என்பதால் இது மிகுவும் முக்கியத்துவம் பெறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+