சிதம்பரத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து ஒருவர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil

சிதம்பரம் மாரியப்பன் நகர் 2வது குறுக்குத்தெருவை சேர்ந்த பேராசிரியர் பன்னீர்செல்வத்தின் வீடு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. அந்த வீட்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழக ஊழியர் அருள் என்பவர் தங்கியிருந்தார். அவருடன் மேலும் சிலர் இருந்துள்ளனர்.
இன்று அருள் அறையில் பயங்கர வெடிசப்தம் கேட்டது. இதில் அருள் படுகாயமடைந்தார். அவரை மூன்று பேர் ஆட்டோவில் கொண்டு சென்று தனியார் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
வெடித்தது என்ன பொருள் என்று முதலில் தெரியவில்லை. பின்னர் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் வெடித்தது நாட்டு வெடிகுண்டு என்றும் வெடிகுண்டுகள் தயாரிக்கும் போது அவை வெடித்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது..












Click it and Unblock the Notifications