Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிதம்பரம் அருகே கணவன்- மனைவி தற்கொலை! வீடியோ காலில் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சிதம்பரம்: சிங்கப்பூரில் வேலை செய்து வரும் கணவரிடம் வீடியோ காலில் பேசிய மனைவி திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த கணவரும் சிங்கப்பூரில் தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

சிதம்பரம் அருகே அத்தியாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவருக்கும் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள குளத்தகுறிச்சி பகுதியை சேர்ந்த கவுரி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

crime chidambaram

இவர்களுக்கு 4 வயதிலும் 2 வயதிலும் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். பன்னீர் செல்வம் சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். விடுமுறை நாட்களில் வீட்டுக்கு வருவாராம். அப்போதெல்லாம் சண்டையிட்டுக் கொண்டேதான் இருப்பார் என கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு கவுரி அடிக்கடி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் கவுரி, தனது கணவர் வீட்டிற்கு குழந்தைகளுடன் வந்தாராம்.

இதையடுத்து நேற்று , தனது தங்கையிடமும் ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள தனது தந்தையிடமும் வீடியோ காலில் கவுரி பேசியதாக தெரிகிறது. அவர்களிடம் பேசிவிட்டு தனது கணவருடனும் வீடியோ காலில் பேசியுள்ளார்.

crime chidambaram

பின்னர் பேசி முடித்த சில மணி நேரங்களில் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அங்கிருந்த குழந்தைகள் அழுவதை அறிந்த அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது கவுரி, தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.

இதையடுத்து புதுச்சத்திரம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றினர். இந்த சம்பவம் குறித்து கணவர் பன்னீர் செல்வத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பன்னீர் செல்வம், அங்கே ஒரு அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

இதுகுறித்து கவுரியின் உறவினர்கள் கூறுகையில் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு நடக்கும். இதனால் கவுரி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிடுவார். நேற்றைய தினம் என்ன நடந்தது என தெரியவில்லை. அவர்களுக்குள் என்ன சண்டை நடந்தது என்றும் தெரியவில்லை. தற்போது இரு பெண் குழந்தைகளும் ஆதரவற்ற நிலையில் உள்ளனர். பன்னீர் செல்வத்தின் உடலை தமிழகம் கொண்டு வர அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+