தேசதுரோக வழக்கில் வைகோ விடுதலை- சென்னை செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேசதுரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலர் வைகோவை சென்னை செசன்ஸ் நீதிமன்றம் விடுதலை செய்து இன்று தீர்ப்பளித்தது.

சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் 21-ந் தேதி 'ஈழத்தில் நடப்பது என்ன?' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. இக் கருத்தரங்கில் கலந்துகொண்டு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.

Chennai court discharges Vaiko in sedition case

அப்போது அவர் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக அவர் மீது தேசதுரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை 3-வது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

அரசு தரப்பு சாட்சிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் வைகோ ஆஜராகி இருந்தார். அப்போது, அரசு தரப்பு சாட்சிகள் அளித்த சாட்சியங்களின் அடிப்படையில் வைகோவிடம் கேள்விகள் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் பதில் அளித்தார். இதன்பின்னர் இருதரப்பு இறுதிகட்ட வாதம் நடந்து முடிந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் இருந்து வைகோ விடுதலை செய்யப்படுவதாக செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+