ஜெ. தொடர்ந்த அவதூறு வழக்கு: சு.சுவாமி அக். 30ல் நேரில் ஆஜராக கோர்ட் சம்மன்!
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி அக்டோபர் 30-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
இலங்கையால் சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்கள் விடுதலைக்கு தானே காரணம், அவர்களின் படகுகளை விடுவிக்காததற்கும் தானே காரணம் என்று தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழக மீனவர் பிரச்சனையில் பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதுவது குறித்து தினமலர் மற்றும் டைம்ஸ் ஆப் இண்டியா நாளேடுகளுக்கு அளித்த பேட்டியில் சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்திருந்தார்.
இதனால் சுப்பிரமணியன் சுவாமி மீது முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குகளில் சுப்பிரமணியன் சுவாமி அக்டோபர் 30-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று சம்மன் அனுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications