காவிரி-குண்டாறு திட்டத்தை நிறைவேற்றக்கோரி விஷம் குடிக்க முயன்ற விவசாயிக்கு நீதிமன்றம் சம்மன்
விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற விவசாயிக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
புதுக்கோட்டை: காவிரி-குண்டாறு திட்டத்தை நிறைவேற்றக்கோரி விஷம் குடிக்க முயன்ற புதுக்கோட்டை விவசாயி மிசா. மாரிமுத்து என்பவருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது விவசாயிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட காவிரி குண்டாறு பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் விவசாயி மிசா மாரிமுத்து கலந்து கொண்டார்.

அப்போது புதுக்கோட்டை மாவட்டம் உள்பட 7 மாவட்டங்களை வளமாக்கும் காவிரி-குண்டாறு திட்டத்தை இணைப்புத் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும். செயல்படுத்த தவறினால் அடுத்த மாதம் நடக்கும் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வதாக விவசாயி மிசா.மாரிமுத்து மிரட்டல் விடுத்தார்.
இதனிடையே கடந்த மாதம் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் கணேஷ் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு விஷத்துடன் வந்த மிசா மாரிமுத்து, விஷம் குடிக்க முயன்றார். இதையடுத்து தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இந்த நிலையில் இன்று மிசா மாரிமுத்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக போலிசார் பதிவு செய்த வழக்கிற்காக மிசா மாரிமுத்து நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த செய்தி விவசாயிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications