கொஞ்சி விளையாடும் அருவிகள்.. குற்றாலத்தில் குஷியாட்டம் போடும் மக்கள் கூட்டம்
குற்றாலம்: குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் பிரமாதமாக தண்ணீர் கொட்டி வருவதால் சீசன் களை கட்டி மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
நாடெங்கிலும் இருந்து எராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்தில் நேற்று முதல் குவிந்து வருகின்றனர். நேற்று ரம்ஜான் என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் குற்றால அருவியில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

லட்சுமி பாட்டியிடம் சங்கிலிப் பறிப்பு
இன்று அதிகாலை முதலே அருவிக்கரையில் கூட்டம் அலைமோதியது. இதில் மதுரையை சார்ந்த சுற்றுலாப் பயணி லக்ஷ்மி என்ற 70 வயது மூதாட்டியின் 10 பவுன் தங்க சங்கிலியை குளித்துக் கொண்டிருந்தப் போது யாரோ ஒருவர் அபகரித்து சென்றுவிட்டார்.

கேரள அருவிகளுக்கும் கூட்டம்
இங்குள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டினாலும், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அருகிலுள்ள கேரள மாநிலம் ஆரியங்காவு பாலருவி, அச்சன்கோவில் மணலாறு, செங்கோட்டை குண்டாறு உள்ளிட்ட பகுதிகளை நோக்கி சென்றவண்ணம் உள்ளனர்.

சரக்கு வாங்க ஒரு கூட்டம்
அதேபோல, அதிகாலை முதலே குற்றால அருவிகளில் குளியலை முடித்து பிற அருவிகளை நோக்கி படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள் "சரக்கு" வாங்குவதற்கு செங்கோட்டை, பிரானூர் பார்டர் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால் அங்கு போக்குவரத்து பாதிப்பு அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.

குடிகார பயணிகளின் குத்தாட்டம்
குடித்துவிட்டு சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிகளில் போடும் ஆட்டம் அதிகரித்து வருகிறது. குண்டாறு நீர்த்தேக்கம் பகுதியில் இன்று சுற்றுலாப் பயணிகள் எராளமானவர்கள் திரண்டுள்ளதால் அங்கு கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

பயணிகளின உற்சாகப் படகுப் பயணம்
மேலும் அணைப் பகுதியில் படகு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதால் உற்சாகமாக பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

மாணவன் உயிரிழப்பு
இந்நிலையில் சிவகாசி கல்லூரியில் 3ஆம் ஆண்டு படிக்கும் கோவில்பட்டியை சார்ந்த 4 மாணவர்கள் குண்டாறு பகுதியில் குடித்து கும்மாளம் போட்டவாறு அணையின் ஆழமான பகுதியில் நீந்தி சென்றுள்ளனர். இதில் சதீஷ் என்ற மாணவன் நீரில் மூழ்கி இறந்துள்ளார். அவரது உடலைத் தேடும் பணியில் தீயணைப்பு துறையினரும், காவல்துறையினரும்,ஈடுப் பட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications