குற்றால சீசன் சாரலுடன் தொடங்கியது... அருவிகளில் தண்ணீர் கொட்டுவதால் உற்சாகம்
குற்றாலம்: தென்றல் காற்றும் இதமான சாரலுமாய் குற்றால சீசன் தொடங்கியுள்ளது. அருவிகளில் தண்ணீர் கொட்டுவதால் அங்கு சென்றுள்ள சுற்றுலா பயணிகளும், சிறு கடை வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தென்னகத்தின் ஸ்பா என்று அழைக்கப்படும் பெருமையுடையது குற்றாலம். இங்குள்ள அருவிகளில் விழும் தண்ணீர் மூலிகை குணம் நிறைந்தது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழையானது அங்குள்ள அடர்ந்த வனப்பகுதிகளைக் கடந்து, பல்வேறு வகையான மூலிகைகளின் வழியாக பாய்ந்தோடி வந்து குற்றாலத்தில் அருவியாக கொட்டுகிறது. எனவே இந்த அருவி நீரில் குளிப்பது உடலுக்கு ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது.
தென்மேற்குப் பருவ மழைக் காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் குற்றாலத்தில் இதமான தென்றலும் ரம்மியமாய் பொழியும் சாரல் மழையிலும் நனைந்து கொண்டே கொட்டும் அருவிகளில் நீராடுவது அனைவருக்கும் பிடித்தமான விசயம். இதற்காகவே ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்தில் குவிகின்றனர்.

அருவிகள் நகரம்
இங்குள்ள பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம், புலியருவி, தேனருவி, செண்பகாதேவி அருவி என அனைத்து அருவிகளிலும் சீசன் காலங்களில் தண்ணீர் கொட்டும். இந்த தண்ணீரில் நீராடுவதோடு இங்கு விளையும் பழங்களையும் உண்டு மகிழ்ந்து செல்வர் சுற்றுலா பயணிகள்.

சீசன் தொடக்கம்
ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்குப் பருவக்காற்று வீசத் தொடங்கியதுமே சீசன் ஆரம்பமாகிவிடுகிறது. இந்த ஆண்டு கடந்த 2 வாரகாலமாகவே சீசன் தொடங்காமல் போக்கு காட்டியது. இதனால் சுற்றுலா பயணிகளும், வியாபாரிகளும் ஏமாற்றமடைந்தனர். 17 நாட்களுக்குப் பின்னர் தற்போது முதன் முறையாக சாரல் மழையுடன் சீசன் தொடங்கியுள்ளது.

சாரல் மழை
குற்றாலத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து தென்மேற்குப் பருவக்காற்று வீசுகிறது. நேற்று காலையில் அருவிப் பகுதிகளில் லேசான சாரல் விழுந்தது. பேரருவியில் குளிக்கும் அளவுக்கு தண்ணீர் விழுந்தது. மலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்தால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என்று வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

குளுகுளு குற்றாலம்
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை தீவிரமடைந்தால் குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்பரித்துக்கொட்டும். அப்போது குற்றாலம், தென்காசி என சுற்றுவட்டாரப்பகுதிகளில் சாரல் மழையும், இதமான தென்றல் காற்றுமாய் ரம்மியமான சூழலை உருவாக்கும் இதனை அனுபவிக்க குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் படையெடுப்பார்கள். சீசன் தொடங்கிவிட்டது... பயணிகளே நீங்கள் தயாராகிவிட்டீர்களா?
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications