ஜல்லிக்கட்டுக்கு தடை... தமிழர்களின் பண்பாட்டை குலைக்கும் பாஜகவின் சதி... முத்தரசன் விளாசல்

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்திருப்பது தமிழர்களின் பண்பாட்டை குலைக்கு பாஜகவின் சதிச் செயல் என்று முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகை அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

சிபிஐயின் மூத்த தலைவர் நல்லகண்ணு, சி. மகேந்திரன் மற்றும் நடிகர் சத்யராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்டோர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். உண்ணாவிரதம் மாலையில் முடிவடைந்த நிலையில், மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

CPI condemns BJP’s Anti-Tamil Standing

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதில் பங்கேற்கும். தமிழர்களின் பண்பாட்டை குலைக்கும் சதியில் மத்தியில் ஆளும் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது. மேலும், நாட்டு மாடுகள் இனத்தை அழிக்கும் முயற்சியிலும் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக முத்தரசன் குற்றம்சாட்டினார்.

இன்று தலைநகர் சென்னையில், கம்யூனிஸ்ட்கள் உண்ணாவிரதம், மாணவர்கள் போராட்டத்தில் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு, பாஜக அலுவலகம் முற்றுகை, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் போராட்டம் என பல போராட்டங்கள், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+