குமரியில் வெல்வாரா? முன்னாள் சி.பி.எம் எம்.பி.பெல்லார்மின்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் சிபிஐ (எம்) வேட்பாளராக ஏ.வி.பெல்லார்மின் (வயது 60) போட்டியிடுகிறார்.
இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., மற்றும் வழக்கறிஞர் பட்டம் பெற்றவர். இவருக்கு அன்புசெல்வி என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் பிரச்சனைகளுக்காக நடைபெற்ற பல்வேறு போராட்டங்களுக்கு தலைமையேற்றவர். கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுத்தொழிலாளர் சங்கத்திலும், மீனவ தொழிலாளர் சங்கத்திலும், கட்டுமானத் தொழிலாளர் சங்கத்திலும் பொறுப்பு ஏற்று தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடியவர். தற்போது கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.
இவர் ஏற்கனவே கடந்த 2004-ம் ஆண்டு நாகர்கோவில் தொகுதியிலிருந்து வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக சிறப்பாக பணியாற்றியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது, பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறையில் நிலைக்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். 2009-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் ஹெலன் டேவிட்சனிடம் தோல்வியை தழுவினார்.
கன்னியாகுமரி தொகுதி வாக்காளர்கள் மத்தியில் நன்கு அறிமுகமான பெல்லார்மின் இம்முறை வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்வாரா?












Click it and Unblock the Notifications