தஞ்சாவூரில் கரையேறுவாரா? சி.பி.ஐ (எம்) வேட்பாளர் தமிழ் செல்வி
Subscribe to Oneindia Tamil

எம்.ஏ., பி.எட். படித்துள்ள இவர் 1994ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து 20 ஆண்டுகளாக கட்சியின் முக்கிய ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவரது கணவர் என்.வி. கண்ணன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
நடுக்காவேரி டாஸ்மாக் கடை அகற்றக் கோரிய போராட்டம், 100 நாள் வேலை திட்டம், பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை கண்டித்த போராட்டம் என பல்வேறு போராட்டங்களில் தலைமையேற்று நடத்தியவர்.
தஞ்சை மாவட்டத்தில் நிலப்பிரபுக்களால் படுகொலை செய்யப்பட்ட கட்சியின் தலைவர்களில் ஒருவரான தியாகி வெங்கடாசலத்தின் மருமகள் தமிழ்ச்செல்வி என்பது சிறப்பம்சம்.












Click it and Unblock the Notifications