தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம்- இந்திய கம்யூ. தேர்தல் அறிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வலியுறுத்தியுள்ளது,
லோக்சபா தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து போட்டியிடுகின்றன. இதனிடையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை சென்னையில் இன்று வெளியிடப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களான டி.ராஜா, ஆர். நல்லகண்ணு மற்றும் மாநிலச் செயலர் தா. பாண்டியன் ஆகியோ இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
இந்த அறிக்கையில், மத்தியில் அமையும் புதிய அரசு நதிகளை விரைவாக இணைக்க வேண்டும்; தமிழகத்தில் ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். தடைகளை தகர்த்து சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications