புதுச்சேரியில் உடைந்தது மநகூ- நெல்லித்தோப்பில் யாருக்கும் ஆதரவு இல்லை: இ.கம்யூ.
புதுச்சேரியில் நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதும் இல்லை; யாருக்கும் ஆதரவும் இல்லை என இ.கம்யூ அறிவித்துள்ளது.
புதுச்சேரி: தமிழகத்தில் மக்கள் நலக் கூட்டணி கட்சிகள் மல்லுக்கட்டி கொண்டிருக்கும் நிலையில் புதுச்சேரியில் ஆளுக்கு ஒரு திசையில் அக்கட்சிகள் சிதறிப் போய்விட்டன.
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிக்கு நவம்பர் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் முதல்வர் நாராயணசாமியை ஆதரிக்கப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திடீரென அறிவித்தது.

மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகளின் இம்முடிவு பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இடதுசாரிகளின் நிலை என்ன என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, நெல்லித் தோப்பு தொகுதியில் போட்டியிடப் போவதில்லை; அதே நேரத்தில் யாருக்கும் ஆதரவு தரவும் தரப் போவதில்லை எனவும் அறிவித்துள்ளது. புதுச்சேரி மாநில இ.கம்யூனிஸ்ட் செயலர் விஸ்வநாதன் இதனை அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் மக்கள் நலக் கூட்டணி உடைந்து சிதறிவிட்டதையே இந்த அறிவிப்புகள் வெளிப்படுத்துகின்றன.












Click it and Unblock the Notifications