For Daily Alerts
Just In
காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்து கருணாநிதி பேசுவது சந்தர்ப்பவாதம்: இந்திய கம்யூனிஸ்ட் சாடல்
டெல்லி: மதச்சார்பற்ற அரசு அமைய காங்கிரஸை ஆதரிப்போம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியிருப்பது பச்சை சந்தர்ப்பவாதம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா சாடியுள்ளார்.
சென்னையில் நேற்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய கருணாநிதி, மத்தியில் மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டுமானால், காங்கிரஸைக் கூட ஆதரிப்போம் என்று கூறியிருந்தார்.
அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் கருணாநிதியின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா, இது ஒரு பச்சை சந்தர்ப்பவாதம். ஏன் இவர்கள் எல்லாக் காலத்திலும் இந்த நாடகத்தை ஆடுகிறார்கள் என்றார்.
Comments
lok sabha election 2014 cpi dmk congress karunanidhi லோக்சபா தேர்தல் 2014 சிபிஐ திமுக காங்கிரஸ் கருணாநிதி
English summary
CPI Senior leader Guruda dasgupta criticised DMK leader Karunanidhi's stand to support the Congress after the lok sabha elections.
Story first published: Thursday, March 27, 2014, 8:04 [IST]