காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்து கருணாநிதி பேசுவது சந்தர்ப்பவாதம்: இந்திய கம்யூனிஸ்ட் சாடல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மதச்சார்பற்ற அரசு அமைய காங்கிரஸை ஆதரிப்போம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியிருப்பது பச்சை சந்தர்ப்பவாதம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா சாடியுள்ளார்.
சென்னையில் நேற்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய கருணாநிதி, மத்தியில் மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டுமானால், காங்கிரஸைக் கூட ஆதரிப்போம் என்று கூறியிருந்தார்.
அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் கருணாநிதியின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா, இது ஒரு பச்சை சந்தர்ப்பவாதம். ஏன் இவர்கள் எல்லாக் காலத்திலும் இந்த நாடகத்தை ஆடுகிறார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications