அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம்... சென்னையில் போராடிய ஜி.ரா கைது!
அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.
சென்னை : அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை அண்ணாசாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜி.ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து மணாவ அமைப்பினர் அண்ணாசாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி, மாணவர் அமைப்பு சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று பேசிய ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது : நீட் அவசர சட்டத்தில் விலக்கு வாங்க மாநில அரசுக்கு துப்பு இல்லை.

கடைசியாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓர் ஆண்டு விலக்கு அளிக்கப்படும் என்று உறுதியளித்தார். இதன் உறுதியை ஏற்று அரசு அவசரச் சட்டதை கொண்டு வந்தது, உயிரிழந்த மத்திய அமைச்சர் விலக்கு அளிக்கப்படும் என்றார், ஆனால் மத்திய அரசு வழக்கறிஞர் தமிழகத்திற்கு மட்டும் விலக்க அளிக்க முடியாது என்றார்.
ஏழை மாணவி உச்சநீதிமன்றம் கைவிரித்ததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலைக்கு பொறுப்பேற்க வேண்டியது மத்திய, மாநில அரசுகள். மத்திய, மாநில அரசை கண்டித்து மத்திய அரசு அதிகாரத்தை பயன்படுத்தி அவசர சட்டம் கொண்டு வர் வேண்டும். இதனை வலியுறுத்தியே தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அமைப்பின் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் மாணவர்களை பாதுகாப்பதற்காக வாதாட வேண்டிய அரசு அணிகள் இணைப்பில் மட்டுமே கவனம் செலுத்திய கையாளாகாத தனத்தால் தான் மாணவி அனிதா உயிரிழந்தார். மாநில அரசு இனியும் தொடர எந்த அறுகதையும் இல்லை என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோரை போலுசார் கைது செய்தனர். இதேபோன்று அண்ணா சாலை அஞ்சல்நிலையம் பகுதியில் 1 மணி நேரமாக மார்க்சிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் மாணவர் அமைப்பு பங்கேற்றுள்ளனர் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் போராட்டம் தொடர்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications