திமுக தொண்டர்களைத் தேடட்டும் கலைஞர்... கே.வரதராஜன் விளாசல்
சென்னை: தேடித் தேடித் பார்க்கிறேன், மூன்றாவது அணி எங்கே இருக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அவர் தேடிப் பார்த்தாலும் கிடைக்காது, காரணம் இப்போது அதுதான் முதல் அணி. எனவே அதைத் தேடுவதை விட்டு விட்டு திமுக தொண்டர்களை கருணாநிதி தேடிப் பார்க்கட்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் கே.வரதராஜன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
தேடித் தேடி பார்க்கிறேன் மூன்றாவது அணி எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் திமுக தலைவர் கலைஞர். அவர் மூன்றாவது அணி என்று தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணியை தேடி இருந்தால் கிடைக்காது. ஏனென்றால் அதுதான் தற்போது முதல் அணி.
இந்த அணியை ஸ்பெக்ட்ரம் ஊழல் பட்டியலில் தேடினால் கிடைக்காது; சொத்துக் குவிப்பு வழக்கு பட்டியலில் தேடினால் கிடைக்காது; கிரானைட் ஊழலில், தாதுமணல் ஊழலில் தேடினால் கிடைக்காது; மதுபானக் கூட்டணியில் தேடினால்கிடைக்காது.
எனவே, இந்த அணியை தேடுகிற வேலையை விட்டுவிட்டு தேர்தல் களத்தில் காணாமல் போன அந்தக் கால உண்மையான திமுக தொண்டர்களை கலைஞர் தேடினால் நன்றாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications