சென்னை நடுக்குப்பம் பகுதியில் 'சுதந்திரமான' விசாரணை நடத்த வேண்டும்: பிரகாஷ் காரத்
வன்முறையில் சூறையாடப்பட்ட நடுக்குப்பம் மீன்மார்க்கெட் பகுதியை மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் இன்று பார்வையிட்டனர். அப்போது வன்முறைக்குள்ளான நடுக்குப்பம் பகுதியில் சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என
சென்னை: நடுக்குப்பம் பகுதியை இன்று பார்வையிட்ட மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் அப்பகுதியில் சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் வன்முறையில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
சென்னை நடுக்குப்பத்தில் காடந்த 23ஆம் தேதி போராட்டக்காரர்களை கலைப்பதாக கூறி காவல்துறையினர் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஊர்திகள் தீக்கிரையாக்கப்பட்டன.

அங்கிருந்த மீன் மார்க்கெட்டும் சூறையாடப்பட்டது. மேலும் அப்பகுதியை சேர்ந்வர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளதாகவும், பெண்களை ஆபாசமாக பேசியதாகவும் புகார் எழுந்தது.
இந்நிலையில் போலீசாரே வாகனங்கள் மற்றும குடியிருப்புகளுக்கு தீ வைப்பது மற்றும் கடைகளை சூறையாடியது உள்ளிட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் வன்முறை வெறியாட்டத்துக்குள்ளான நடுக்குப்பம் பகுதியை மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத், மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் இன்று பார்வையிட்டனர். அப்போது நடந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்களிடம் அவர்கள் கேட்டறிந்தனர்.
இதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பிரகாஷ் காரத், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, வன்முறைக்குள்ளான நடுக்குப்பம் பகுதியில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
வன்முறைக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிப்பட்டட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு பிரகாஷ் காரத் செய்தியாளர்களிடம் பேசினார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications