ஜிஎஸ்டி வரி உயர்வு எதிரொலி.. தமிழகம் முழுவதும் பட்டாசு, தீப்பெட்டி ஆலைகள் மூடல்
கோவில்பட்டி: ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவில்பட்டி, சிவகாசி பகுதியில் பட்டாசு தொழிற்சாலைகள், தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டுள்ளன.
கோவில்பட்டியில் இயங்கி வரும் 1000க்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆலைகள் மத்தியரசின் 18சதவீத ஜீ.எஸ்.டி வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்ததினை தொடங்கியுள்ளது. இதனால் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளது மட்டுமின்றி 100 கோடி ரூபாய் மதிப்பிலான பண்டல்கள் தேக்கம் அடைந்துள்ளது.

மத்தியரசு இன்று முதல் அறிமுகப்படுத்தியுள்ள ஜி.எஸ்.டி வரி விதிப்பில் பகுதி மற்றும் முழுநேர இயந்திர தீப்பெட்டி தொழிலுக்கு 18 சதவீத வரி விதிப்பு செய்துள்ளது. இந்திய அளவில் தீப்பெட்டி உற்பத்தியில் 85 சதவீதம் அளவு தமிழகத்தில் தான் உற்பத்தி செய்யபடுகிறது.
தமிழகத்தில் கோவில்பட்டி, விருதுநகர், சிவகாசி, சங்கரன்கோவில் மற்றும் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் தீப்பெட்டி தொழில் நடைபெற்று வருகிறது. 300க்கும் மேற்பட்ட பகுதி நேர இயந்திர தீப்பெட்டி ஆலைகளும், 20க்கும் மேற்பட்ட முழு நேர இயந்திர தீப்பெட்டி ஆலைகளும், இவற்றை சார்ந்து 3000க்கும் மேற்பட்ட சிறு தீப்பெட்டி ஆலைகளும் இயங்கி வருகிறது.
ஏற்கனவே மூலப்பொருள்களின் விலை உயர்வு, சிறு தொழில் பட்டியலில் இருந்து நீக்கம் போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டு வந்த தீப்பெட்டி தொழிலுக்கு மற்றொரு பிரச்சினை மத்திய அரசு தற்போது விதித்துள்ள 18 சதவீத வரி ஜி.எஸ்.டி வரி விதிப்பு உருவெடுத்துள்ளது.
ஜி.எஸ்.டி வரியை குறைக்க வேண்டும், பகுதி மற்றும் முழுநேர இயந்திர தீப்பெட்டி தொழிலுக்கான வரி விதிப்பில் வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி இன்று முதல் தமிழகம் முழுவதும் தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் காலவரையற்ற போராட்டத்தினை தொடங்கியுள்ளனர். இதனால் கோவில்பட்டி, கயத்தார், விளாத்திகுளம், கழுகுமலை, கடம்பூர், எட்டயபுரம், இளையரசனேந்தல், வானரமுட்டி பகுதியில் உள்ள 1000க்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆலைகள் இன்று முதல் வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல் பட்டாசு உற்பத்திக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 750 பெரிய, சிறிய அளவிலான பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாவட்டத்தில் 700 பட்டாசு விற்பனை கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்த வேலை நிறுத்தத்தால் லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications