மெட்ரோ ரயில் சுரங்கப்பணி வீடுகளில் விரிசல்... அச்சத்தில் சிந்தாரிப்பேட்டை மக்கள்
சென்னை: மெட்ரோ ரயில் பணியால் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. மண்ணிற்குள் வீடுகள் இறங்கியதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சென்னையில் மெட்ரோ ரயில் உயர்மட்ட பாதையிலும், சுரங்கப் பாதையிலும் செல்லக்கூடிய வகையில் அமைக்கப்படுகின்றன. கோயம்பேடு - ஆலந்தூர் இடையே உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரயில் பணிகள் நிறைவடைந்து விரைவில் சேவை தொடங்க உள்ளன.

சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் செல்வதற்கான பணிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. சென்ட்ரலில் இருந்து சிந்தாதிரிப்பேட்டை மேதின பூங்காவிற்கும், அங்கிருந்து அரசின் புதிய பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, அண்ணாசாலை வழியாக மீனம்பாக்கம் விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளன.
சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக சுரங்கப்பாதை பணிகள் இரவு-பகலாக நடைபெற்று வருகின்றன. சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அய்யாவு முதலி தெருவில் உள்ள 5 வீடுகளில் நேற்று மாலை திடீரென விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் வீடுகள் இரண்டு அடி அளவிற்கு மண்ணில் புதைந்தாகவும் வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மெட்ரோ ரயில் பணியால் அங்குள்ள சுதர்சனம் என்பவரின் வீட்டில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரது வீட்டில் 5 பேர் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். ஒரு பகுதியில் சுதர்சனம் பயன்படுத்தி வருகிறார். வாடகைக்கு வசித்து வரும் முத்துகிருஷ்ணன் மற்றும் சாமிகேசவனின் மனைவி ராஜகுமாரி ஆகியோர் வீட்டின் கதவை திறக்க முடியாமல் சிரமப்பட்டனர். அதன் பின்னர் பார்க்கும் போது கதவு கீழே இறங்கி இருந்ததை கண்டுபிடித்தனர். வீட்டின் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சுதர்சனம் வீட்டையொட்டி வீடுகளிலும் லேசான விரிசல் இருந்தது. இதுபற்றி மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அந்தப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர் அங்கு பொதுமக்கள் நடமாட்டத்தை போலீசார் கட்டுப்படுத்தினர். இந்த பகுதியில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் சுரங்கப்பணியால் ஏற்பட்ட அதிர்வின் காரணமாகவே வீடுகளில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மெட்ரோ ரயில் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். சுதர்சனம் வீடு பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருந்ததால் அதனை பூட்டி சீல் வைத்தனர். வீட்டில் வசித்து வந்தவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. அங்குள்ள ஒரு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். சம்பவம் நடந்த அய்யாவு முதலி தெருவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. விரிசல் விழுந்த வீடுகளில் இருந்தவர்களை பாதுகாப்பான இடத்திற்கு காவல் துறையினர் வெளியேற்றிவிட்டதாக கூறியுள்ளனர். மேலும் அப்பகுதியில் அதிகாரிகள் இன்று ஆய்வு நடத்த உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications