ஐபிஎல் ரஜினி யோசனை குறித்து பரிசீலித்து வருகிறோம்! - சிஎஸ்கே உரிமையாளர்
Recommended Video

சென்னை: காவிரி பிரச்சினையில் தமிழர்களின் உணர்வை ஐபிஎல் போட்டிகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாட வேண்டும் என்ற ரஜினிகாந்தின் யோசனை குறித்து பரிசீலித்து வருகிறோம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
காவிரி பிரச்சினையில் ஒட்டுமொத்த தமிழகமும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அனைத்துக் கட்சிகள், மக்கள், மாணவர்கள் என எல்லோருமே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக் கூடாது, மீறி நடத்தினால் மைதானத்துக்குள் போராட்டம் வெடிக்கும் என்று போராட்டக்காரர்கள் எச்சரித்தனர். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடமும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று சென்னையில் பேட்டியளித்த ரஜினிகாந்த் ஐபிஎல் போட்டிகளை தமிழகத்தில் நடத்தாமல் தவிர்க்க வேண்டும் என்றார். அப்படி முடியாவிட்டால் சென்னை அணியைச் சேர்ந்த வீரர்கள் அனைவரும் கருப்பு பட்டை அணிந்தபடி விளையாடி தமிழக மக்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தரலாம் என்றார். இதுகுறித்து பிசிசிஐ, ஐபிஎல் நிர்வாகம் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர்கள் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓவான விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஐபிஎல் போட்டிகளில் கறுப்பு பட்டை அணிந்து விளையாட வேண்டும் என்ற ரஜினிகாந்தின் யோசனை குறித்து பரிசீலித்து வருகிறோம். விரைவில் இதுகுறித்து அறிவிப்போம்," என்றார்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல்












Click it and Unblock the Notifications