விஜயகாந்த் எப்ப கட்சிப் பேரை "தேமுதிமுக"ன்னு மாத்துனாரு..?- கலகலக்க வைத்த கடலூர் தொண்டர்கள்
கடலூர்: தேமுதிக தலைவரான விஜயகாந்த் தான் அடிக்கடி வார்த்தைகளை அள்ளித் தெளித்து பிரச்சனைகளில் சிக்கிக் கொள்கிறார் என்றால் அவரது கட்சித் தொண்டர்களோ நாங்களாம் அதுக்கும் மேல என்று நிரூபித்து வருகின்றார்கள்.
தேர்தல் பரபரப்பு தமிழகத்தில் சுற்றிச் சுழலும் நேரத்தில் வெள்ளமும், மழையும் கேப்டனின் கையை ஓங்கி உயர வைத்திருந்தன. என்னதான் வெகுளியான மனிதர், நல்லது செய்பவர் என்றாலும் விவேகம் அடிக்கடி இவர் கை நழுவி போய்விடும்.
அப்படித்தான் அரசியல் கட்சிகள் இவருடைய கூட்டணிக்காக ஆலாய் பறந்து கொண்டிருக்கும் நிலையில் "தூ" என்று பத்திரிக்கையாளர்களை பார்த்து துப்பி ஒரு படி மீண்டும் சறுக்கி நிற்கிறார்.

களைகட்டும் ஸ்டண்ட்கள்
இந்நிலையில் மறுபுறம் போஸ்டர் கிழிப்பு, சவால் பேச்சு என்று தலைவருக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்று தேமுதிக தொண்டர்களும் செயல்பட்டு வருகின்றனர்.

இதிலையுமா அட கொடுமையே
இதற்கு முத்தாய்ப்பாக கடலூரில் இன்று தேமுதிக சார்பில் வெள்ள நிவாரணம் முறையாக வழங்கப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வண்ணாங்குடிக் காடு தொண்டர்கள் வந்த வாகனத்தில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் அமைந்திருந்தது.

ஹைய்யோ பாவம் கன்ப்யூசன்
இவ்வாகனத்தில் தேமுதிக என்பதற்கு பதிலாக "தே.மு.தி.மு.க" என்று அச்சடித்து வந்திருந்தனர். திமுகவையும், தேமுதிகவையும் சேர்த்து விட்டார்களா என்ற சந்தேகம் பார்த்தவர்களுக்கு வந்தது.

சொந்த செலவில் தேவையா
"நமக்கு நாமே" ஆப்படித்துக் கொள்ளும் வேலையை தேமுதிக எப்பத்தான் நிறுத்தப் போகிறதோ..!












Click it and Unblock the Notifications