மீண்டும் கடலூரைச் சூழ்ந்த வெள்ளம்.. மக்களை மீட்கும் பணியில் நேரடியாக குதித்த ககன்தீப் சிங் பேடி
கடலூர்: ஏற்கனவே வெள்ளத்தில் மூழ்கித் தத்தளித்த கடலூர் மாவட்டத்தில் மறுபடியும் வெள்ளக்காடாகியுள்ளது. விடிய விடிய கொட்டிய அடை மழை காரணமாக பல பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. மாவட்டத்தில் மழை வெள்ளத்திற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் மாவட்ட கலெக்டர் சுரேஷ் குமார், எஸ்.பி. விஜயக்குமார், சிறப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி ஆகியோர் நேரடியாக ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டத்தின் பல இடங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் மீண்டும் பலத்த மழை பெய்தது. நேற்று காலையிலும் பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, பரங்கிப்பேட்டை, கொத்தவாச்சேரி, சேத்தியாத்தோப்பு, விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விட்டு, விட்டு பலத்த மழையாக பொழிந்தது.
மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிதம்பரத்தில் 36 மில்லி மீட்டர், கடலூரில் 30.60 மி.மீ., வானமாதேவியில் 30 மி.மீ. மழையும் பெய்தது. ஒட்டு மொத்தத்தில் மாவட்டத்தில் சராசரியாக 12.85 மில்லி மீட்டர் மழை பதிவானது.
கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியும், சுவர் இடிந்தும், தண்ணீரில் மூழ்கியும் நேற்று முன்தினம் வரை 68 பேர் பலியாகி இருந்தனர். மாவட்டத்தில் நேற்றும் பலத்த மழை பெய்ததால் தண்ணீரில் மூழ்கியும், சுவர் இடிந்தும், மின்னல் தாக்கியும் என மேலும் 4 பேர் பலியானார்கள்.
கோமுகி ஆற்றில் தற்போது வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கரையோரப் பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ககன்தீப் சிங் பேடி, கலெக்டர் சுரேஷ் குமார், எஸ்.பி. விஜயக்குமார் ஆகியோர் நேரடியாக ஈடுபட்டனர்.
வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் வீடு வீடாக சென்று மீட்புப் பணிகளில் அதிகாரி பேடி ஈடுபட்டார்.
-
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications