மீண்டும் கடலூரைச் சூழ்ந்த வெள்ளம்.. மக்களை மீட்கும் பணியில் நேரடியாக குதித்த ககன்தீப் சிங் பேடி
கடலூர்: ஏற்கனவே வெள்ளத்தில் மூழ்கித் தத்தளித்த கடலூர் மாவட்டத்தில் மறுபடியும் வெள்ளக்காடாகியுள்ளது. விடிய விடிய கொட்டிய அடை மழை காரணமாக பல பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. மாவட்டத்தில் மழை வெள்ளத்திற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் மாவட்ட கலெக்டர் சுரேஷ் குமார், எஸ்.பி. விஜயக்குமார், சிறப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி ஆகியோர் நேரடியாக ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டத்தின் பல இடங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் மீண்டும் பலத்த மழை பெய்தது. நேற்று காலையிலும் பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, பரங்கிப்பேட்டை, கொத்தவாச்சேரி, சேத்தியாத்தோப்பு, விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விட்டு, விட்டு பலத்த மழையாக பொழிந்தது.
மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிதம்பரத்தில் 36 மில்லி மீட்டர், கடலூரில் 30.60 மி.மீ., வானமாதேவியில் 30 மி.மீ. மழையும் பெய்தது. ஒட்டு மொத்தத்தில் மாவட்டத்தில் சராசரியாக 12.85 மில்லி மீட்டர் மழை பதிவானது.
கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியும், சுவர் இடிந்தும், தண்ணீரில் மூழ்கியும் நேற்று முன்தினம் வரை 68 பேர் பலியாகி இருந்தனர். மாவட்டத்தில் நேற்றும் பலத்த மழை பெய்ததால் தண்ணீரில் மூழ்கியும், சுவர் இடிந்தும், மின்னல் தாக்கியும் என மேலும் 4 பேர் பலியானார்கள்.
கோமுகி ஆற்றில் தற்போது வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கரையோரப் பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ககன்தீப் சிங் பேடி, கலெக்டர் சுரேஷ் குமார், எஸ்.பி. விஜயக்குமார் ஆகியோர் நேரடியாக ஈடுபட்டனர்.
வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் வீடு வீடாக சென்று மீட்புப் பணிகளில் அதிகாரி பேடி ஈடுபட்டார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications