நிவாரண பொருளில் ஆளும் கட்சி சின்னம் போட நெருக்கடி.. கடலூரில் தன்னார்வலர்கள் புலம்பல்
கடலூர்: தன்னார்வலர்கள் கொண்டு செல்லும் நிவாரண பொருட்களிலும், ஆளும் கட்சி சின்னம் போட்டால்தான் ஹெல்ப் செய்ய விடுவோம் என்று நிர்வாகிகள் மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
சென்னையை போலவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நகரம் கடலூர். இருப்பினும் சென்னை போன்ற கவனிப்புகள் கடலூருக்கு கிடைக்கவில்லை. தொடர்ச்சியாக அரசியல் கட்சிகளாலும், ஊடகங்களாலும், கடலூர் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
கடலூர்க்கு எந்த உதவி பொருள் எடுத்துட்டு போனாலும் ஆளுங்கட்சி சின்னத்தோடதான் ஹெல்ப் பண்ணணும்ன்னு கண்டிஷன் போட்டு புடுங்குறானுக #SaveCuddalore
— மறுக்காலத்து கள்ளன் (@Vallavan003) December 3, 2015 இதை கருத்தில்கொண்டு, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பல தன்னார்வலர்கள், பல்வேறு ஊர்களில் வாழும் சமூக வலைத்தளவாசிகளை தொடர்புகொண்டு நிவாரண பொருட்களை திரட்டியபடி, கடலூர் சென்றுள்ளனர்.
ஆனால், அங்கு சென்றபோது, நிவாரண பொருட்களை கொடுக்கவிடாமல் கட்சி பிரமுகர்கள் சிலர் தடுத்ததாக புகார் எழுந்துள்ளது. நிவாரண பணிக்காக கொண்டு சென்ற பொருட்களை கொடுக்கவிடாமல், தடுக்கும் ஆளும் கட்சியினர், அதில் ஆளும் கட்சியின் சின்னம் இருக்க வேண்டும் என்று வற்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து கடலூர் நிவாரண பணியில் ஈடுபட்டுள்ள ஒரு டிவிட்டர் வெளியிட்டுள்ள டிவிட் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகார் குறித்து ஆளும் தரப்பில் விசாரிக்க முற்பட்டபோது, பதில் கிடைக்கவில்லை.












Click it and Unblock the Notifications