”ஆரத்தி எடு, கரன்சியை புடி” பணம் கொடுக்க கட்சிகளின் புது ”ஐடியா”
ஆலங்குடி: தேர்தலுக்கு பணம் கொடுக்க மட்டும் இந்த அரசியல்வாதிகளிக்கு எப்படித்தான் புதுப்புது "டெக்னிக்" எல்லாம் கிடைக்கிறது என்றே தெரியவில்லை.
இந்த மூளையை நாட்டின் முன்னேற்றத்திற்கு அவர்கள் ஒதுக்கி இருந்திருந்தால் நாடு எப்பொழுதோ வல்லரசாகி இருக்கும்.
இப்படித்தான் ஆலங்குடி பகுதியில் ஆரத்தி தட்டுகள் மூலம் புது யுக்தியில் பணம் சப்ளை செய்யப்படுகிறது.

பணம் கொடுக்க தடை:
வாக்காளர்களுக்கு பணம், அன்பளிப்பு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆரத்தி தட்டில் பணம்:
ஓட்டுக்கு பணம் என்பதுபோல் வேட்பாளர்களுக்கு எடுக்கப்படும் ஆரத்தி தட்டுகளில் பணம் போடுவதும் குற்றமாகும். ஆனால், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆலங்குடி பகுதியில் தேர்தல் ஆணையத்தை ஏமாற்றி ஆரத்தி தட்டுகளுக்கு நூதன முறையில் பணம் சப்ளை செய்யப்படுகிறது. இந்த பகுதியில் வேட்பாளர் ஒருவர் ஓட்டு கேட்டு வருகிறார் என்றால் அப்பகுதி மக்கள் ஆரத்தி தட்டுகளுடன் கூடி விடுகின்றனர்.
நூதன முறையில் பட்டுவாடா:
எத்தனை ஆரத்தி எடுக்கப்படுகிறதோ அதை எண்ணிக்கொள்கிறார்கள். பின்னர் வேட்பாளர் சென்றவுடன் அந்த கட்சி பிரதிநிதி ஒருவர் தட்டுக்களுக்கு ஏற்ற பணத்தை உள்ளூர் கட்சி பிரமுகரிடம் கொடுக்கிறார்.
காலை, மாலை "கரன்சி":
அவர் பணத்தை ஆரத்தி எடுத்தவர்களுக்கு பிரித்து கொடுக்கிறார். இது ஒரு முறை என்றால் காலையில் வேட்பாளர் வந்தால் அதற்குரிய பணம் மாலையிலும் மாலையில் வேட்பாளர் வந்தால் அதற்குரிய பணம் இரவிலும் மற்றொரு முறையிலும் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. மேலும் பிரசாரம் நடந்து கொண்டிருக்கும் போதே தட்டுகளை எண்ணி வேட்பாளரின் பிரதிநிதி ஒருவர் உரிய பணத்தை அங்குள்ள உள்ளூர் பிரமுகரிடம் கொடுத்து விடுகிறார்.
கைகுலுக்கி கரன்சியை திணி:
கை குலுக்குவது போல் குலுக்கி பணத்தை திணித்து விடுகிறார். இந்த பணம் பின்னர் பட்டுவாடா செய்யப்படுகிறது. இப்படி பல வழிகளில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கண்டுபிடிக்கவே முடியாத அளவுக்கு புதுப்புது டெக்னிக்குகளில் ஆரத்திகளுக்கு பணம் சப்ளை நடக்கிறது.
ஆணையத்தின் கண்ணில் "மிளகாய்ப்பொடி":
ரூ.50 முதல் ரூ.500 வரை கட்சிகளின் பலத்துக்கு ஏற்ப பணம் சப்ளை செய்யப்படுகிறது.வேட்பாளர் பிரசாரம் செய்யும் போது தேர்தல் ஆணைய அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்தும் தெரிவதில்லை.
வீடியோவுக்கே "டேக்கா":
வீடியோவில் பதிவு செய்தாலும் இந்த ஆரத்தி சமாசாரம் வெளியில் தெரிவதில்லை. இதனால் மற்ற பகுதிகளை காட்டிலும் ஆலங்குடியில் ஆரத்தி தட்டுகள் அதிகளவில் குவிகின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications