உடுமலை காவல்நிலைய பலாத்கார வழக்கு: கைதான 3 போலீசாருக்கு 10 நாளில் ஜாமீன்- பொதுமக்கள் 'ஷாக்'
திருப்பூர்: உடுமலைப் பேட்டை காவல்நிலையத்தில் விசாரணை கைதியை பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்ட சப்.இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 3 போலீசாரை, நிபந்தனை ஜாமீனில் விடுவித்துள்ளது கோவை நீதிமன்றம். பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு 10 நாளில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட சம்பவம் திருப்பூர்
மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் லீலாவதி என்ற மூதாட்டி. இவரது கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்திரா என்ற பெண்ணை, விசாரணையின் போது அடித்து சித்ரவதை செய்ததோடு, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் எழுந்த புகாரை அடுத்து, சென்னை உயர்நீதிமன்ற
உத்தரவின் அடிப்படையில் சி.பி.ஐ. இதுகுறித்து விசாரித்தது.

ஓராண்டுக்கு பின்னர் கடந்த 20-ம் தேதி இந்த வழக்கில் தொடர்புள்ளதாக போலீஸ் எஸ்.ஐ விஜயகுமார், போலீசார் ரங்கநாயகம், திலக் ஆகியோரை சி.பி.ஐ கைது செய்தது. மூவரும்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், மூவருக்கும் ஜாமீன் வழங்க கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட 7 கடுமையான சட்டப்பிரிவுகளில் கைது செய்யப்பட்டதால், அவ்வளவு எளிதில் ஜாமீனில் வர முடியாது என சொல்லப்பட்டு வந்த நிலையில், ஜாமீன் மனு மீதான
விசாரணை இன்று காலை விசாரணைக்கு வந்தது. ஆனால், ஜாமீன் மனுவுக்கு சி.பி.ஐ எதிர்ப்பு தெரிவிக்காததால், எஸ்.ஐ உள்ளிட்ட 3 போலீசாருக்கும், தினமும் தலைமை குற்றவியல்
நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளில் கைது செய்யப்பட்ட மூன்று போலீசாருக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ள சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications