உடுமலை காவல்நிலைய பலாத்கார வழக்கு: கைதான 3 போலீசாருக்கு 10 நாளில் ஜாமீன்- பொதுமக்கள் 'ஷாக்'
திருப்பூர்: உடுமலைப் பேட்டை காவல்நிலையத்தில் விசாரணை கைதியை பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்ட சப்.இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 3 போலீசாரை, நிபந்தனை ஜாமீனில் விடுவித்துள்ளது கோவை நீதிமன்றம். பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு 10 நாளில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட சம்பவம் திருப்பூர்
மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் லீலாவதி என்ற மூதாட்டி. இவரது கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்திரா என்ற பெண்ணை, விசாரணையின் போது அடித்து சித்ரவதை செய்ததோடு, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் எழுந்த புகாரை அடுத்து, சென்னை உயர்நீதிமன்ற
உத்தரவின் அடிப்படையில் சி.பி.ஐ. இதுகுறித்து விசாரித்தது.

ஓராண்டுக்கு பின்னர் கடந்த 20-ம் தேதி இந்த வழக்கில் தொடர்புள்ளதாக போலீஸ் எஸ்.ஐ விஜயகுமார், போலீசார் ரங்கநாயகம், திலக் ஆகியோரை சி.பி.ஐ கைது செய்தது. மூவரும்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், மூவருக்கும் ஜாமீன் வழங்க கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட 7 கடுமையான சட்டப்பிரிவுகளில் கைது செய்யப்பட்டதால், அவ்வளவு எளிதில் ஜாமீனில் வர முடியாது என சொல்லப்பட்டு வந்த நிலையில், ஜாமீன் மனு மீதான
விசாரணை இன்று காலை விசாரணைக்கு வந்தது. ஆனால், ஜாமீன் மனுவுக்கு சி.பி.ஐ எதிர்ப்பு தெரிவிக்காததால், எஸ்.ஐ உள்ளிட்ட 3 போலீசாருக்கும், தினமும் தலைமை குற்றவியல்
நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளில் கைது செய்யப்பட்ட மூன்று போலீசாருக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ள சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications