அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த மண்டலம்- புயலாக மாறும் வாய்ப்பு!
சென்னை: அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ். பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறி தென்கிழக்கே சுமார் 570 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இது மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசையில், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர்கிறது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்திருக்கிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 72 மணிநேரத்தில் புயலாக மாற வாய்ப்பு உள்ளது. அது புயலாக மாறினால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாது. அடுத்த 24 மணிநேரத்தில் தென்தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும். தென்தமிழகத்தின் கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழையோ அல்லது கனமழையோ பெய்யக்கூடும்.
சென்னையில் வானம் மேகமூட்டமாக இருக்கும். ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யலாம். மீனவர்கள் மீன் பிடிக்க ஆழ்கடலுக்கு செல்ல வேண்டாம். ஆந்திர கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று மீனவர்கள் வலியுறுத்தப்படுகிறார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications