காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது: பள்ளிகள் விடுமுறை
சென்னை: குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து இன்று அதிகாலை வேதாரண்யம் இடையே கரையை கடந்தது இதன் காரணமாக கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
இது குறித்து சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வங்கக்கடலில் உருவான மாதி புயல் வடக்கு நோக்கி சென்று, பின்னர் வலுவிழந்து மீண்டும் தமிழகம் நோக்கி நகர்ந்து வந்துள்ளது. அது இப்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் இருந்து மேலும் வலுகுன்றி தாழ்வுப்பகுதியாக தென்மேற்கு வங்கக்கடலில் வேதாரண்யம் அருகே அது கரையை கடந்தது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடலோர பகுதிகளில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

வடக்கு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் தரைக்காற்றும் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். இந்த வானிலை 14-ந்தேதி காலை வரை நீடிக்கும். அதன் பின்னர் படிப்படியாக மழை குறையும். இவ்வாறு வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கனமழை
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம் உள்பட பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. புதுவை துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
கடலூர், தஞ்சாவூர், திருவாரூர் போன்ற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. நாகை மாவட்டத்திலும் நேற்று பரவலாக மழை பெய்தது. கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. முத்துப்பேட்டையில் வீசிய சூறாவளிக் காற்றினால் மின் ஒயர்கள் அறுந்து விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மீனவர் மரணம்
நாகையை அடுத்த சாமந்தான் பேட்டையை சேர்ந்த 4 பேர் ஒரு படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அலையின் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்தது. இதனால் 4 பேரும் கடலில் குதித்து நீந்தினர். இதில் 3 பேர் மட்டுமே நீந்தி கரைக்கு வந்து சேர்ந்தனர். தவமணி (வயது40) என்பவர் இறந்தார்.சென்னை மற்றும் புறநகரில் நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவில் லேசான மழை பெய்தது. பலத்த காற்றும் வீசியது. கடலூரில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. காரைக்கால், கோடியக்கரை மீனவர்களும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை
பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. ஆனால் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 அரையாண்டு பொதுத் தேர்வுகள் வழக்கம்போல நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல புதுச்சேரி, காரைக்கால் பகுதியிலும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications