நெல்லையை சூறையாடிய ஓகி புயல்... தாமிரபரணியில் வெள்ளம் - மாஞ்சோலை மக்கள் அவதி
பயங்கர சூறைக்காற்றுடன் ஓகி புயல் தாக்கியதில் குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்கள் முடங்கின.
திருநெல்வேலி: ஓகி புயலின் தாக்கத்தினால் தென் மாவட்டங்கள் முடங்கியுள்ளன. நெல்லை மாவட்டத்தில் காணும் இடமெங்கும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 2000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி அருகே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஓகி புயலாக மாறியுள்ளது. இந்த ஓகி புயலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
வானிலை மையம் கணித்தது போலவே ஓகி புயலால் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. மழைக்கு இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நெல்லையில் பலத்த மழை
நெல்லை மாவட்டம் பாபநாசம், மணிமுத்தாறு அணையில் தலா 28 செ.மீ மழை அளவு பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

வீடுகளை சூழ்ந்த வெள்ளம்
நெல்லை மாவட்டம் பனகுடி அருகே புண்ணியவாளன்புரத்தில் உள்ள குடியிருப்பு வீடுகளில் 30க்கும் மேற்பட்ட வீடுகளில் காட்டாறு வெள்ளம் புகுந்தது. குடியிருப்புவாசிகள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடல்போல காட்சி தரும் அணைகள்
பாபநாசம் அணை 129 அடியை எட்டியுள்ளது. மணிமுத்தாறு அணை 104 அடியாக உயர்ந்துள்ளது. கடையநல்லூர் அருகே உள்ள கருப்பாநதி அணை நிரம்பியது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே கால்வாய்களில் திறந்து விடப்பட்டுள்ளது. அதே போல் கொடுமுடியாறும் நிரம்பி வருவதால் அணை பாதுகாப்பு கருதி நம்பியாற்றில் 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. ஆற்றங்கரையோரம் தாழ்வான வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன.

மரங்கள் சாய்ந்து சேதம்
தொடர் மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை சுற்று வட்டார பகுதிகளில் சாலை ஓரங்களில் அமைந்துள்ள மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

2000 பேர் பாதிப்பு
அங்குள்ள 6 எஸ்டேட் மக்கள் எங்கும் செல்ல முடியாமல் மிகவும் அவதி அடைந்துள்ளனர் மற்றும் நேற்று இரவு ஏற்பட்ட மின்தடை இன்று மாலை 6 மணி வரைக்கும் சரி ஆகவில்லை இதனால் 2000 த்திற்க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு

கரைபுரண்டு ஓடும் வெள்ளம்
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக 2வது நாளாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மணிமுத்தாறு, பாபநாசம் அருவிகளிலும் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
-
கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு ஷாக் சம்பவம்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. பதுங்கியிருந்த 4 பேர் கைது -
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications