சென்னையில் 4000 மின் கம்பங்கள் சரிந்தன.. இன்று மாலைக்குள் மின்சார சப்ளை: அமைச்சர் தங்கமணி உறுதி
சென்னையில், மாலைக்குள் மின் வினியோகம் சீரமைக்கப்படும் என அமைச்சர் தங்கமணி உறுதியளித்தார்.
சென்னை: தமிழக தலைநகர் சென்னையை நேற்று மாலை கடந்த வர்தா புயலால் நகரமே சின்னாபின்னமாகிவிட்டது. காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் புயலின் தாக்கம் இருந்தது.
காற்றும், மழையும் அம்மாவட்டங்களிலும் பலமாக இருந்தது. எனவே சென்னை உட்பட புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

பலத்த காற்று வீசியபோது மரங்கள் மட்டுமின்றி, மின்கம்பங்களும் விழுந்தன. எனவே சென்னையில் மின்சார இணைப்பை இரவுக்குள் திருப்பி தர முடியவில்லை. பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கின.
இந்நிலையில், இன்று மாலைக்குள் சென்னையில் மின்சார சப்ளை மீண்டும் வழங்கப்படும் என்று அத்துறை அமைச்சர் தங்கமணி தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இன்று தெரிவித்தார்.

சென்னை மற்றும் புறநகரில் சுமார் 4000 மின்கம்பங்கள் விழுந்துள்ளதாகவும், 125 தெருவிளக்கு கம்பங்கள் வீழ்ந்துள்ளதாகவும், மின் கம்பங்களையும், மரங்களையும் அகற்றும் பணி முடிந்ததும் மின் விநியோகம் விரைவில் சீரமைக்கப்படும் என்றும் தங்கமணி தெரிவித்தார். வருவாய்த்துறை செயலாளர் சந்திரமோகனும் அதை தெளிவுபடுத்தினார். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்துள்ளதாக அவர் தெரிவித்தார். சென்னையில், புயல் சேத மீட்பு பணிகளை 6 அமைச்சர்கள் மேற்பார்வையிடுவதாகவும், மாலைக்குள் மின் வினியோகம் சீரமைக்கப்படும் என தங்கமணி உறுதியளித்தார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications