தினமும் 2 லட்சம் லிட்டர் குடிநீரை வீணடிக்கும் அதானி நிறுவனம்- கொதிப்பில் ராமநாதபுரம் மக்கள்
தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி தாண்டவமாடும் நேரத்தில் அதானியின் சூரிய மின்சக்தி நிறுவனம், தினமும் 2 லட்சம் லிட்டர் குடிநீரை வீணடிக்கிறது என்று ராமநாதபுரம் மாவட்ட மக்கள் கொதிக்கின்றனர்.
ராமநாதபுரம்: வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தின் நீராதாராத்தை மேலும் உறிஞ்சும் வகையில், கமுதியில் உள்ள அதானி குழுமம் செயல்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அதானியின் சூரிய மின்சக்தி நிலையத்தில் தகடுகளை கழுவ தினமும் 2 லட்சம் லிட்டர் குடிநீர் உறிஞ்சப்பட்டு வீணடிக்கப்படுகிறது என்பதால் கமுதி மக்கள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே சாயல்குடி சாலையில் உள்ளது அதானி குழுமத்தின், கவுதம் அதானிக்கு சொந்தமான 648 மெகாவாட் சூரிய மின்சக்தி நிலையம். இந்தியாவின் மிகப்பெரிய இயற்கை திட்டமான இதனைக் கடந்த ஆண்டு, வீடியோ கான்பரன்சிங் மூலம் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

கமுதி பகுதியில் செங்கப்படை, செந்தனேந்தல், தாதாகுளம், குண்டுகுளம், சொக்கலிங்கபுரம், ஒழுகுபுளி, புதுக்கோட்டை, தோப்படைப்பட்டி, ஊ.கரிசல்குளம் உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ரூ.4,536 கோடி மதிப்பீட்டில் அமைந்துள்ள இத்திட்டத்திற்காக 2,500 ஏக்கர் பரப்பளவு விளைநிலங்கள் 2 ஆண்டுகளுக்கு முன்னதாக கையகப்படுத்தப்பட்டு, 648 மெகா வாட் சூரிய மின்சக்தி நிலையம் அமைந்தது. இந்த நிறுவனத்தின் தேவைக்காக நாள்தோறும் 2 லட்சத்திற்கும் அதிகமான லிட்டர் குடிநீர் பயன்படுத்தப்படுகிறது. இதனால் வறட்சியால் திண்டாடும் ராமநாதபுரம் மாவட்டம், தற்போது மேலும் கடுமையான குடிநீர் பஞ்சத்தில் சிக்கியுள்ளது. இதனால் வரும் 29ம் தேதி கமுதியில் மக்கள் பெரிய அளவுக்குப் போராட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications