வேலை வேண்டும்... தினக் கூலி ஊழியர்கள் புதுச்சேரி சட்டப்பேரவை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி: மீண்டும் வேலை வழங்கக் கோரி, பணி நீக்கம் செய்யப்பட்ட பொதுப் பணித் துறை தினக் கூலி ஊழியர்கள் புதுச்சேரி சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரியில் கடந்த மே மாதம் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னர் விறுவிறுவென பல்வேறு அரசுத் துறைகளில் ஆயிரக்கணக்கான தினக் கூலி ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் இந்த ஆள் சேர்ப்பு நடைபெறாமல் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக ஆள்சேர்ப்பு நடைபெற்றது என்ற குற்றச்சாட்டு அப்போது எழுந்தது.

மேலும், முதலமைச்சர் ரங்கசாமி தேர்தலில் வெற்றி பெற தவறான முறையில் ஊழியர்கள் நியமனம் நடைபெற்றுள்ளது என்று எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தது.
இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி புகார் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டார். பின்னர், விசாரணை நடத்தப்பட்டு தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கையும் அனுப்பி வைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் அளித்த புகார் உறுதியானதையடுத்து பொதுப்பணித் துறையில் நியமிக்கப்பட்டிருந்த 2,650 ஊழயர்களை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது தேர்தல் ஆணையம்.
இதுதவிர பல்வேறு துறைகளிலும் நியமிக்கப்பட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்ட 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள், தங்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்று கோரி புதுச்சேரி சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications