வேலை வேண்டும்... தினக் கூலி ஊழியர்கள் புதுச்சேரி சட்டப்பேரவை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி: மீண்டும் வேலை வழங்கக் கோரி, பணி நீக்கம் செய்யப்பட்ட பொதுப் பணித் துறை தினக் கூலி ஊழியர்கள் புதுச்சேரி சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரியில் கடந்த மே மாதம் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னர் விறுவிறுவென பல்வேறு அரசுத் துறைகளில் ஆயிரக்கணக்கான தினக் கூலி ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் இந்த ஆள் சேர்ப்பு நடைபெறாமல் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக ஆள்சேர்ப்பு நடைபெற்றது என்ற குற்றச்சாட்டு அப்போது எழுந்தது.

மேலும், முதலமைச்சர் ரங்கசாமி தேர்தலில் வெற்றி பெற தவறான முறையில் ஊழியர்கள் நியமனம் நடைபெற்றுள்ளது என்று எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தது.
இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி புகார் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டார். பின்னர், விசாரணை நடத்தப்பட்டு தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கையும் அனுப்பி வைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் அளித்த புகார் உறுதியானதையடுத்து பொதுப்பணித் துறையில் நியமிக்கப்பட்டிருந்த 2,650 ஊழயர்களை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது தேர்தல் ஆணையம்.
இதுதவிர பல்வேறு துறைகளிலும் நியமிக்கப்பட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்ட 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள், தங்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்று கோரி புதுச்சேரி சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications