உடுமலை ஆணவக்கொலை: கவுசல்யாவின் தாய்மாமன் கைது
திருப்பூர்: உடுமலைப்பேட்டை ஆணவப்படுகொலை வழக்கில் தலைமறைவாக இருந்த கவுசல்யாவின் தாய்மாமன் பாண்டிதுரையை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குமரலிங்கம் கிராமத்தைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர் சங்கர். இவர், திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த கவுசல்யாவை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் கவுசல்யாவின் பெற்றோரும் உறவினர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியரை உடுமலையில் கடந்த 13ம் தேதி கும்பல் ஒன்று வெட்டிச் சாய்த்தது. இதில், தலித் இளைஞர் சங்கர் சிகிச்சை பலனின்றி சில மணி நேரங்களிலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த கவுசல்யா கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தக் கொலை வழக்கில் கவுசல்யாவின் உறவினர்கள் மற்றும் கூலிப் படையைச் சேர்ந்த 9 பேர் மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ், உடுமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைமறைவாக இருந்த கவுசல்யாவின் தாய்மாமன் பாண்டிதுரையையும் போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் உடுமலை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ஸ்ரீவித்யா உத்தரவிட்டார்.
இந்த கொலை தொடர்பாக போலீசில் வாக்குமூலம் கொடுத்த கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, எனது மகளின் செயலால் உறவினர்கள் என்னை கேவலமாக பேசினர். என்னால், கோயில் விழா, சந்தை, கடை என எங்கும் செல்ல முடியவில்லை. ஊர் முழுவதும் பல மாதிரியாக பேச துவங்கினர். நாளுக்கு நாள் எனது ஆத்திரம் அதிகரித்தது. எனவே, சங்கரை தீர்த்துக்கட்ட முடிவுசெய்தேன். சங்கர் கதையை முடித்துவிட்டு, கவுசல்யாவை காரில் அழைத்து வாருங்கள் என எனது ஆட்களுக்கு உத்தரவிட்டேன். கவுசல்யா வர மறுத்தால் அவளையும் தீர்த்து கட்டிவிடுங்கள் என கூறினேன் என்று கூறியுள்ளார்.
முன்னதாக கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை அடையாளம் காட்ட கவுசல்யா கோவை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு நீதிபதி ஸ்ரீவித்யா முன்னிலையில் கவுசல்யா குற்றவாளிகளை அடையாளம் காட்டினார். பின்னர் அவர் பலத்த பாதுகாப்புடன் மீண்டும் மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதனிடையே, கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவர் பிரசன்னா உடுமலை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீவித்யா முன்னிலையில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு அளித்தனர். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஸ்ரீவித்யா, பிரசன்னாவை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதியளித்துள்ளார். இந்த விசாரணையில் , சங்கர் கொலை தொடர்பாக மேலும் பல உண்மைகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications