உடுமலை ஆணவக்கொலை: கவுசல்யாவின் தாய்மாமன் கைது
திருப்பூர்: உடுமலைப்பேட்டை ஆணவப்படுகொலை வழக்கில் தலைமறைவாக இருந்த கவுசல்யாவின் தாய்மாமன் பாண்டிதுரையை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குமரலிங்கம் கிராமத்தைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர் சங்கர். இவர், திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த கவுசல்யாவை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் கவுசல்யாவின் பெற்றோரும் உறவினர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியரை உடுமலையில் கடந்த 13ம் தேதி கும்பல் ஒன்று வெட்டிச் சாய்த்தது. இதில், தலித் இளைஞர் சங்கர் சிகிச்சை பலனின்றி சில மணி நேரங்களிலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த கவுசல்யா கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தக் கொலை வழக்கில் கவுசல்யாவின் உறவினர்கள் மற்றும் கூலிப் படையைச் சேர்ந்த 9 பேர் மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ், உடுமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைமறைவாக இருந்த கவுசல்யாவின் தாய்மாமன் பாண்டிதுரையையும் போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் உடுமலை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ஸ்ரீவித்யா உத்தரவிட்டார்.
இந்த கொலை தொடர்பாக போலீசில் வாக்குமூலம் கொடுத்த கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, எனது மகளின் செயலால் உறவினர்கள் என்னை கேவலமாக பேசினர். என்னால், கோயில் விழா, சந்தை, கடை என எங்கும் செல்ல முடியவில்லை. ஊர் முழுவதும் பல மாதிரியாக பேச துவங்கினர். நாளுக்கு நாள் எனது ஆத்திரம் அதிகரித்தது. எனவே, சங்கரை தீர்த்துக்கட்ட முடிவுசெய்தேன். சங்கர் கதையை முடித்துவிட்டு, கவுசல்யாவை காரில் அழைத்து வாருங்கள் என எனது ஆட்களுக்கு உத்தரவிட்டேன். கவுசல்யா வர மறுத்தால் அவளையும் தீர்த்து கட்டிவிடுங்கள் என கூறினேன் என்று கூறியுள்ளார்.
முன்னதாக கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை அடையாளம் காட்ட கவுசல்யா கோவை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு நீதிபதி ஸ்ரீவித்யா முன்னிலையில் கவுசல்யா குற்றவாளிகளை அடையாளம் காட்டினார். பின்னர் அவர் பலத்த பாதுகாப்புடன் மீண்டும் மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதனிடையே, கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவர் பிரசன்னா உடுமலை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீவித்யா முன்னிலையில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு அளித்தனர். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஸ்ரீவித்யா, பிரசன்னாவை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதியளித்துள்ளார். இந்த விசாரணையில் , சங்கர் கொலை தொடர்பாக மேலும் பல உண்மைகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications