குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா தொடக்கம்
தூத்துக்குடி: பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. வரும் 22ம்தேதி நள்ளிரவு 12 மணிக்கு சிகர நிகழ்ச்சியாக மகிசாசூரனை, முத்தாரம்மன் வதம் செய்யும் மகிசாசூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு, கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா நடந்தது. கொடியேற்றத்தை தொடர்ந்து நேர்த்திக் கடன் செலுத்த இருக்கும் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை கடைபிடிக்க தொடங்கினர்.
மதியம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகளும், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அம்மன் வீதிஉலாவும் நடக்கிறது. விழாவையெட்டி தினமும் கலைநிகழ்ச்சிகளும் நடக்கின்றன.

தசரா திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9 மணிக்கு துர்க்கை திருக்கோலத்தில் சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா புறப்பாடு நடக்கிறது.
2ம் திருநாள் இரவில் விசுவகர்மேசுவரர் திருக்கோலத்தில் அம்மன் வீதிஉலாவும், 3ம் நாள் இரவில் பார்வதி திருக்கோலத்திலும், 4ம் திருநாளில் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்திலும், 5ம் திருநாளில் நவநீத கிருஷ்ணர் கோலத்திலும், 6ம் திருநாளில் மகிசாசூரமர்த்தினி திருக்கோலத்திலும், 7ம் திருநாளில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்திலும், 8ம் திருநாளில் கஜலட்சுமி திருக்கோலத்திலும், 9ம் திருநாள் இரவில் கலைமகள் திருக்கோலத்தில் அம்மன் வீதி உலா நடக்கிறது.10ம் திருநாளான வருகிற 22ம்தேதி (வியாழக்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவில் முன்பாக எழுந்தருளுகிறார். அப்போது, சிகர நிகழ்ச்சியாக மகிசாசூரனை, முத்தாரம்மன் வதம் செய்யும் மகிசாசூரசம்ஹாரம் நடக்கிறது.

இந்தியாவில் மைசூரில்தான் தசரா விழா கோலாகலமாக நடைபெறும். அதற்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணத்தில் தான் அதே போன்று பெரிய அளவில் தசரா விழா நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications