தசரா பண்டிகை எதிரொலி- பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
சென்னை: தசரா பண்டிகையையொட்டி தமிழகத்தில் பூக்கள் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. ஆனபோதும், மழை காரணமாக சில வகைப் பூக்கள் மட்டும் விலை குறைந்து விற்கப்படுகிறது.
தமிழகத்தில் சரஸ்வதி பூஜை நேற்றும், ஆயுத பூஜை, விஜயதசமி இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் முக்கிய பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
நெல்லையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.700க்கு விற்கப்பட்ட பிச்சிப் பூ தற்போது ரூ.100 உயர்ந்து கிலோ ரூ.800க்கு விற்கப்பட்டது. ஆனால், மல்லிகை விலை ரூ.600லிருந்து ரூ.500 ஆக குறைந்து காணப்பட்டது.
மழை காரணமாக...
உள்ளூர் கேந்தி பூ மழையால் நனைந்ததால் ரூ.40 முதல் ரூ.50க்கு விற்கப்பட்டது. கோழிக்கொண்டை பூ கிலோ ரூ.10க்கு விற்கப்பட்டது. சாதாரண நாட்களில் ரூ.50க்கு விற்கப்படும் சம்பங்கி பூ காலை ரூ.200க்கு விற்கப்பட்டது.
தசரா பண்டிகையையொட்டி....
இதுகுறித்து மொத்த பூ வியாபாரிகள் சிலர் கூறுகையில், தசரா பண்டிகையாலும், மழையால் உள்ளூர் பூ உற்பத்தி பாதிக்கப்பட்டதாலும் சில வகை பூக்களின் விலை உயர்ந்துள்ளது. வெள்ளி கிழமை (இன்று) தசரா என்பதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
சில்லறை விற்பனை...
தசரா பண்டிகை என்பதால் கோயிலுக்கு மாலைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதன் காரணமாக இன்னும் பூக்களின் விலை உயர வாய்ப்புள்ளது. சில்லரை விற்பனை கடைகளிலும் வழக்கத்தை விட பூக்களின் விலை கடுமையாக உயர்நதுள்ளது எனத் தெரிவித்தனர்.
வாழை இலை...
சதாரண பூக்களால் கட்டப்பட்ட சிறிய ஆரம் ரூ.50க்கும், ரோஜா சேர்த்து கட்டிய ஆரம் ரூ.75க்கும் விற்கப்பட்டது. இது போல் இலை, வாழை இலை போன்றவற்றின் விலையும் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications