For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தூக்கத்தில் இருந்த மகளின் கன்னத்தில் சூடு... குடிகார தந்தை கைது

Google Oneindia Tamil News

கோவை: கோவை மாவட்டத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மகளின் கண்ணத்தில் சூடு வைத்த தந்தையை போலீஸார் கைது செய்தனர்.

உலக தந்தையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தந்தையே தனது மகளை கொடுமைப் படுத்தும் செய்தி வெளியாகியுள்ளது. கோவை மாவட்டம், நெகமம் அருகிலுள்ள வலசுபாளையத்தை சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ்(41) சுபா தம்பதி. இவர்களுக்கு 8 வயதில் காயத்ரி என்ற மகள் உள்ளார். காயத்ரி அங்குள்ள அரசுப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.

Daughter tortured by father

கூலித்தொழிலாளியான கோவிந்தராஜ், நேற்று முன்தினம் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில், துாங்கிக் கொண்டிருந்த தனது மகள் காயத்ரியை எழுப்பியுள்ளார். ஆழ்ந்த தூக்கத்திலிருந்த காயத்ரி எழுந்திருக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த அவர், காயத்ரியின் இரு கன்னங்களிலும் சூடு வைத்துள்ளார்.

இதனிடையே, சிறுமியின் தாய் சுபா, காயத்ரிக்கு சிசிச்சை அளிப்பதற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது மருத்துவமனையில் இருந்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், கோவிந்தராஜை போலீஸார் கைது செய்தனர்.

English summary
Drunken father arrested as he tortured her daughter by heat in Valasupalayam, Covai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X