பெரியார் பஸ் ஸ்டாண்ட் குமார் மெஸ்ஸில் கை நனைத்த தயாநிதி மாறன்!

Subscribe to Oneindia Tamil

Dayanidhi had dinner in a local night mess in Madurai
மதுரை: மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு தீர்மான விளக்கக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், பெரியார் பஸ் நிலையப் பகுதியில் உள்ள குமார் மெஸ் என்ற சிறிய உணவகத்தில் கட்சிப் பிரமுகர்களுடன் போய் சாப்பிட்டதை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

மதுரையில் நேற்று திமுக பொதுக்குழு தீர்மான விளக்கக் கூட்டம் நடந்தது. ஆரப்பாளையம் பஸ் நிலையம் அருகே கிராஸ் ரோட்டில் நடந்த இந்த கூட்டத்தில் தயாநிதி மாறன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பு தயாநிதி மாறன் தனது இரவுச் சாப்பாட்டை வித்தியாசமான இடத்தில்வைத்துக் கொண்டார். அதாவது பெரியார் பஸ் நிலையப் பகுதியில் உள்ள அப்பகுதியில் பிரபலமான குமார் மெஸ்ஸுக்குள் கட்சியினர் சிலருடன் புகுந்தார்.

அவரைப் பார்த்து அங்கிருந்தவர்களுக்கு ஆச்சரியம். ஆனால் தனது டிரேட் மார்க் புன்னகை பூத்த முகத்துடன் உள்ளே புகுந்த தயாநிதி மாறன், அங்கு அமர்ந்து ஆர்டர் செய்து தனக்குப் பிடித்த ஐட்டங்களை ஒரு பிடி பிடித்தார்.

அதன் பின்னர் தனது மாமா மு.க.அழகிரி வீட்டுக்குப் பறந்தார். அங்கு அழகிரியைச் சந்தித்துப் பேசினார். தயாநிதியை முகம் மலர வரவேற்றுப் பேசினார் அழகிரி. பின்னர் வாசல் வரை வந்து அழகிரியை வழியனுப்பி வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+