பெரியார் பஸ் ஸ்டாண்ட் குமார் மெஸ்ஸில் கை நனைத்த தயாநிதி மாறன்!

மதுரையில் நேற்று திமுக பொதுக்குழு தீர்மான விளக்கக் கூட்டம் நடந்தது. ஆரப்பாளையம் பஸ் நிலையம் அருகே கிராஸ் ரோட்டில் நடந்த இந்த கூட்டத்தில் தயாநிதி மாறன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பு தயாநிதி மாறன் தனது இரவுச் சாப்பாட்டை வித்தியாசமான இடத்தில்வைத்துக் கொண்டார். அதாவது பெரியார் பஸ் நிலையப் பகுதியில் உள்ள அப்பகுதியில் பிரபலமான குமார் மெஸ்ஸுக்குள் கட்சியினர் சிலருடன் புகுந்தார்.
அவரைப் பார்த்து அங்கிருந்தவர்களுக்கு ஆச்சரியம். ஆனால் தனது டிரேட் மார்க் புன்னகை பூத்த முகத்துடன் உள்ளே புகுந்த தயாநிதி மாறன், அங்கு அமர்ந்து ஆர்டர் செய்து தனக்குப் பிடித்த ஐட்டங்களை ஒரு பிடி பிடித்தார்.
அதன் பின்னர் தனது மாமா மு.க.அழகிரி வீட்டுக்குப் பறந்தார். அங்கு அழகிரியைச் சந்தித்துப் பேசினார். தயாநிதியை முகம் மலர வரவேற்றுப் பேசினார் அழகிரி. பின்னர் வாசல் வரை வந்து அழகிரியை வழியனுப்பி வைத்தார்.












Click it and Unblock the Notifications