நீர்மூழ்கி கப்பல் தொடர்பான ரகசியங்கள் பிரான்ஸிலிருந்தே வெளியாகியிருக்க வாய்ப்பு: பொன். ராதாகிருஷ்ணன்
செங்கோட்டை: நீர்மூழ்கி கப்பல் தொடர்பான ஆவணங்கள் பிரான்ஸ் நாட்டிலிருந்துதான் வெளியாகியிருக்க வாய்ப்புகள் உள்ளன. இதற்கு நாம் பொறுப்பாக முடியாது என, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
செங்கோட்டையில் உள்ள வாஞ்சிநாதன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், இந்தியா முழுவதும் மிக முக்கியமான 150 சுதந்திரப் போராட்டத் தியாகிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு மத்திய அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் 14 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மாவீரன் வாஞ்சிநாதன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு துரதிர்ஷ்டவசமாக நடைபெறாமல் போனது. இந்த ஆண்டு உறுதியாக ஜல்லிக்கட்டு நடைபெறும். இதுகுறித்து மத்திய அமைச்சர் மேனகா காந்தியை நாளை சந்திக்க இருக்கிறேன். வரும் ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறும்.
நீர்முழ்கி கப்பல் தொடர்பான ரகசிய தகவல்கள் பிரான்ஸ் நாட்டிலிருந்தே வெளியாகியிருக்க வாயப்புள்ளது. இதற்கு நாம் பொறுப்பேற்க முடியாது. இந்தியாவில் தகவல் வெளியானால் மட்டுமே நாம் பொறுப்பேற்க முடியும்.
மதுரை முதல் தென்காசி வரையிலான நான்குவழிச் சாலைப் பணியில், மதுரை முதல் திருமங்கலம் வரையிலான பணி முடிவடைந்தது. தற்போது திருமங்கலம் முதல் ராஜபாளையம் வரை பணி தொடங்கப்பட உள்ளது. இதேபோன்று தென்காசி முதல் பணகுடிவரையிலும் நான்குவழிச் சாலை அமைக்கும் பணியும் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications